செவ்வாய்

டாஸ்மாக்கும் இன்றைய மாணவர்களும்..!




நமது இளைய சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டு இருகின்றது என்பதே புரியவில்லை. காஞ்சிபுரத்தில் ஒன்பதாவது படிக்கும் மானவன் பீர் பாட்டிலை வாங்கி இடுப்பில் வைத்து கொண்டு சைகிளில் செல்லும் பொழுது பீர் பாட்டிலில் உள்ள கேஸ் அழுத்ததின் காரனமாக பாட்டில் வெடித்து அந்த மானவன் இறந்துள்ளன். இந்த சம்பவத்தை பார்க்கும் பொழுது நம்மை ஆண்ட முன்னால் முதவரும் இன்னால் முதல்வரும் நம் மக்களுக்கும் நமது மானவ சமுதாயத்திற்கும் சேவை செய்யும் விதமாக
டாஸ்மாக்கை ஊருக்கு ஊர் திறந்து நமக்கு ஆற்றிய பணியை தஞ்சாவூர் கல்வெட்டில் தான் பதிய வேண்டும்.

மதுவினால் நமது மானவ சமுதாயம் சீர்கெட்டு போயுள்ளது என்பதை நான் இந்த சம்பவத்தை மட்டும் வைத்து சொல்ல வில்லை. அரசே மதுபான கடைகளை ஊருக்கு ஊர் திறக்கும் முன்பு மது என்பது சமுதாயத்தில் மிக பெரிய குற்றமாக பார்க்கப்பட்டது. டாஸ்மாக்கை அரசு ஆரம்பிக்கும் முன்பு வரை ஒயின்சாப் என்பது அனைத்து ஊரிலும் இருக்காது. சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சந்தை பகுதியாக இருக்கும் நகர பகுதிகளில் மட்டும் தான் இருக்கும்.அங்கு அனைவரும் சென்று நினைத்த நேரத்தில் மது வாங்க முடியாது. கிராமங்களில் ஊருக்கு ஒதுக்கு புறம் மறைவாக சாரய கடைகளும் வெயில் காலங்கலில் கள்ளு கடைகளும் இருக்கும். அந்த கடைகளுக்கு இப்பொழுது டாஸ்மாக் கடைக்கு யார் வேண்டுமானாலும் போவது போல் போக முடியாது. வழக்கமாக வருபவர்கள் மற்றும் தெரிந்தவர்கள் சென்றால் தான் தருவார்கள் யாரும் புதியவர்கள் சென்றால் தரமாட்டார்கள். காரனம் அந்த கடைகள் அரசுக்கு தெரியாமல் சட்டத்திற்க்கு புறம்பாக நடத்த படுபவை. புதியவர்களுக்கு யார் என்று தெரியாமல் விற்றால் அவர்கள் கடை காவல் துறைக்கு தெரிந்து விட வாய்ப்பு இருகின்றது என்ற அச்சம். அங்கு மானவர்கள் சென்று வாங்க நினைப்பது என்பது இயலாத காரியம்.

நான் மானவனாக இருக்கும் பொழுது பள்ளி சீருடை தைப்பதற்காக அருகாமயில் உள்ள நகர் பகுதியில் ஒரு தையற்கடைக்கு சென்ற பொழுது அந்த கடையில் இருந்தவர் மற்றொருவருடன் யேதோ பேசிக்கொண்டிறுக்கும் பொழுது அவர்களின் பேச்சின் ஊடாக ஒரு மது பாட்டில் விலை முப்பது ரூபாய் (பீரா அல்லது மற்ற வகை மதுவா என்பது அந்த வயதில் எனக்கு தெரிய வில்லை) என்பதை தெரிந்து கொண்டேன். இன்றுவரை அது என் நினைவில் மறக்காமல் இருகின்றது. இங்கு ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டி உள்ளது. அன்றைக்கு ஒரு பீரின் விலை முப்பது ரூபாய். என்னை போன்ற மானவர்களின் பாகெட் மனி (வாங்கி திங்க காசுன்னு சொல்லுவாங்க). நான் பத்தாவது படிக்கும் வரை எனக்கு வீட்டில் தருவது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய். எனக்கு மட்டுமல்ல என்னுடன் படித்த பெரும்பாலான மானவர்கள் கொண்டு வரும் காசு அவ்வள்ளவே. ஏதாவது பண்டிகை வந்தால் தான் பதினைந்து அல்லது இருபது ரூபாய் முழுதாக பார்க்க முடியும். அந்த காசை வைத்து நாங்கள் நினத்தாலும் எந்த மதுவும் வாங்க முடியாது. அப்படியே ரெண்டு மூனு பேரு சேர்ந்து காசு போட்டு வாங்க நினைத்தாலும் எந்த மதுபான கடையும் எங்கள் அருகாமயில் இருக்காது. அதற்காக டவுனுக்கு போய் வாங்கி வரும் அளவுக்கு எங்களுக்கு தைரியமும் இருந்தது இல்லை. இதுதான் டாஸ்மாக் திறக்கும் வரை இருந்த நிலை.

அன்றைக்கு ஒரு பீர் முப்பது ரூபாய் இன்று ஒரு பீர் அருபதில் இருந்து என்பது வரை இந்த பதினைந்து வருடத்துக்கு ஒன்று முதல் ஒன்னறை பங்கு வரை விலை உயர்ந்துள்ளது. இது சரியான அலவில் தான் உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு ரூபாய்யும் இரண்டு ரூபாயுமாக கொடுத்து கொண்டிருந்த பாகெட் மனி மேற்கூறிய சதவிகிததில் தான் கூடியுள்ளதா. இன்று படிக்கும் பசங்களிடம் இரண்டு ரூபயோ அல்லது நாங்கு ரூபாயோ பாகெட் மனியாக கொடுக்க முடியுமா. நாம் நூரு இறுனூரு என சாதரனமாக கொடுக்கும் நிலை உள்ளது. அன்று போல மதுபான கடைக்கு போக எந்த சிரமமும் இல்லாமல் அரசே அவர்களுக்கு அருகாமையில் மதுபான கடையை திறந்துள்ளது. இப்படி மானவர்கள் தப்பு பன்னுவதற்க்கான எல்லா வழிகளையும் நாமும் நமது அரசும் திறந்து விட்டிருக்கும் பொழுது மானவர்கள் தவறு செய்ய்யதான் செய்வார்கள்.

இந்த மானவ பருவம் அனைத்து விசயத்தயும் கற்று கொள்ள துடிக்கும் வயசு. அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என தெரியாது. அவர்களை நல்வழிபடுத்த வேண்டியது நமது கடமையும் அரசின் கடமையுமே தவிர இதில் வேரு யாரை குற்றம் சொல்ல முடியும்.

3 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

இந்த மானவ பருவம் அனைத்து விசயத்தயும் கற்று கொள்ள துடிக்கும் வயசு. அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என தெரியாது. அவர்களை நல்வழிபடுத்த வேண்டியது நமது கடமையும் அரசின் கடமையுமே தவிர இதில் வேரு யாரை குற்றம் சொல்ல முடியும்.//

அனைவர் மனதிலும் உள்ள எண்ணத்தை அழகிய
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
மனம் கவர்ந்த பதிவு

நன்பேண்டா...! சொன்னது…

வருகைக்கு நன்றி:Ramani

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான பதிவு !

கருத்துரையிடுக