சனி

முஸ்லீம்களே வன்முறையை ஆதரிகாதீர்..!

முஹமது அவர்களை கீழ்தரமாக சித்தரித்து அமெரிக்காவில் ஷாம்பெஷிலி என்ற திரைப்பட இயக்குனரும், டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகரும் சேர்ந்து 'இன்னொசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற படத்தை எடுத்துள்ளனர். அதன் 13 நிமிட வீடியோ காட்சி யுட்யூபில் வெளியாகியுள்ளது. இத்ற்கு உலகம் முளுவதும் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது ஒரு சாதரன நையாண்டி செய்யப்பட்டு எடுக்க பட்டதாக தோன்றலாம். ஆனால் முஸ்லீம்களை பொருத்தவரைக்கும் அவர்களின் மத உனர்வை புன்படுத்தும் விதத்தில் இது அமைந்து உள்ளது. நாமும் அவர்களின் மத உனர்வை மதித்து நமது கண்டனங்களை தெரிவித்து கொள்கின்றோம்.

 

அதே நேரத்தில் ஒரு அமேரிகன் செய்த தவறுக்காக உலகில் உள்ள அனைத்து அமேரிக்க தூரகமும் தாக்க படுவது கண்டிக்க தக்கது. லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்க பட்டது மட்டும் அல்லாது அமெரிக்க தூதரும் கொல்லபட்டுள்ளார். ஒரு அமெரிக்கன் செய்த தவறுக்கு இந்த அமெரிக்க தூதர் கொல்ல படுவது எந்த விததில் சரியானதாக இருக்க முடியும். கொல்ல பட்டவருக்கு பின்னால் அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கும் மனைவி மக்கள் இருக்க கூடும் அவர்களுக்கு இந்த முஸ்லீம்கள் சொல்லும் பதில் என்ன. கொல்லபட்டவரின் மனைவியும் அவர்களின் குழந்தைகளும் ஒரு தந்தையை இன்று இழந்து நின்று கொண்டு உள்ளனர் அவர்களுக்கு இவர்கள் சொல்லும் பதில் என்ன. நான் அந்த அமெரிக்கன் உங்கள் மத உனர்வை புன்படுத்தும் விததில் படம் எடுத்தது தவறு. அதை நானும் ஒத்து கொள்கின்றேன். ஒருவன் செய்த தவறுக்கு மற்றொருவரை கொல்வதை எப்படி நியாபடுத்த முடியும்.

 

இஸ்லாமியர்கள் பொதுவாக ஒரு வாதத்தை முன் வைபார்கள். உலகில் இஸ்லாதின் பெயரால் நடக்கும் தீவிர வாததிற்கும் இஸ்லாதிற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாதை தவறாக புரிந்து கொண்ட சிலர் செய்யும் இது போன்ற காட்டு மிராண்டி தனமான செயல்களுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை குறை கூருவது சரி அல்ல. எல்லா இஸ்லாமியர்களும் வன்முறையை ஆதரிக்க வில்லை என கூறுவார்கள். இது உன்மையும் கூட இந்த கருத்தை நான் ஆமோதிகின்றேன். இஸ்லாம் என்ற பெயாரால் ஒரு சிலர் செய்யும் குற்றதிற்கு எப்படி ஒட்டு மொத்த இஸ்லமியரும் இஸ்லாமும் பொருப்பு இல்லையோ அதே போல் ஒரு அமேரிக்கன் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த அமேர்க்க தூதர்கங்களை தாக்குவதும் அங்கு இருபர்வளை கொல்வதும் எப்படி சரியாக இருக்க முடியும். இஸ்லாமியர்கள் தீவிர வாததிற்க்கு கூறும் அதே அளவு கோல் இதற்க்கும் பொருந்துமே இதை ஏன் இஸ்லாமிய நன்பர்கள் சிந்திபது இல்லை. லிபியாவில் நடந்ததற்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தமிழ் இஸ்லாமிய நன்பர்கள் கூறக் கூடும். நேற்று சென்னையில் அமெரிக்க தூதரகம் தாக்க பட்டுள்ளது. நல்ல வேளை உயிர் சேதம் ஏற்பட வில்லை. நீங்கள் போராடுங்கள் அதை நான் ஒரு போதும் குற்றமாக சொல்ல வில்லை. உங்களின் உனர்வுகளுக்கு நானும் மதிப்பளிகின்றேன். ஆனால் வன்முறையில் இரங்குவது என்பது எந்த விததிளும் நியாயமாக இருக்க முடியாது. போராடுங்கள் உங்களின் கண்டனங்களை தெரிவியுங்கள் அதை அமைதியான முரையில் செய்யுங்கள். அதுதான் உங்களின் மதிப்பை மற்றவர்களிடம் அதிகரிக்க செய்யும்.

 

எனக்கு தனிபட்ட முறையில் அமெரிகா மீதும் அதன் வெளியுரவு கொள்கை மீதும் நல்ல அபிப்ராயம் கிடையாது, அவர்கள் மத்திய கிழக்கில் இருக்கும் எண்ணெய் வழதால் தமது காலனியாதிக்கதை செலுத்த முயல்வதை நானும் கண்டிக்க கூடியவன் தான் அதே நேரதில் ஒருவன் செய்த குற்றத்திற்காக வேறு ஒருவனை தண்டிப்பது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. முஸ்லீம் சமூகம் இனியாவது சிந்திக்க வேண்டும்.


 

வெள்ளி

மதத்தை விமர்ச்சிக்கலாம் நாகரீகமாக..!



 
  
சமீபகாலமாக பதிவுலக நடக்கும் சண்டைகளை பார்க்கும் பொழுது மிகவும் வெருக்க தக்க வகையில் உள்ளது. அந்த சண்டையில் மதம் பிரதான இடம் வகிக்கின்றது. மதம் மனிதனை பக்குவப் படுத்தி அவனை நேர்வழியில் செல்ல வழிவகை செய்ய வேண்டும். மாராக ஒருவர் மீது மற்றவர் ஆதிக்கம் செலுதும் வகையில் அது இருக்க கூடாது. என்னை பொருத்த வரையில் சில மூட பழக்கவழக்கங்களை தவிர மதங்களில் எந்த குறையும் இருப்பதாக படவில்லை. அதை பின் பற்றும் மனிதனிடம்தான் குறை உள்ளதாகவே தோன்றுகிறது. எல்லா மதங்களுமே அமைதியயும் அன்பையும் தான் போதிகின்றன.

 

மததின் பெயரால் ஏன் இத்தனை சண்டைகள். ஒருவர் மற்றவரின் மததை அவமதிப்பது போல் சமீபத்தில் அதிக அலவில் பதிவுகள் வந்து கொண்டு இருகின்றது. நாட்டில் வேரு எந்த பிரசினையும் இல்லயா. பதிவில் எழுத நாட்டில் என்னற்ற பிரசினைகள் நிறைந்து உள்ளது. அது குறித்து பதிவில் எழுதி அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பதிவர்கள் இப்படி மதத்தின் பெயரால் அடித்து கொள்வது யாருக்கு என்ன பயனை கொடுத்து விட போகின்றது. மததை தூற்றி குறிப்பாக முஸ்லீம்களையும் முஸ்லீம் மதத்தையும் விமர்சிகின்றேன் என கீழ் தரமாக எழுதும் பதிவர்கள். உன்மையாக இஸ்லாம் மததை விமர்சித்து அதில் இருக்கும் தவறான விசயங்களை இஸ்லாமிய நன்பர்களுக்கு விளக்க வேண்டும் என்ற என்னம் இருப்பதாக தெரியவில்லை. மாறாக மதம் குறித்து அவதூராக எழுதினால் அதன் மூலம் வாசகர்களின் என்னிக்கை அதிகரிக்கும் என்ற என்னதை தவிர வேறு காரனம் இருப்பதாக தெரியவில்லை.


 

அவர்கள் எழுதும் பதிவில் அவர்களின் சில அடி வருடிகள் ஒட்டு போட்டு அதை தமிழ்மனத்தில் முன்னனி இடுகை பட்டியலில் கொண்டு வர போராடுகின்ரார்கள். இதனால் யாருக்கு என்ன பயன் இந்த பதிவர்கள் சிந்திக்க மறுகின்றனர். மததின் பெயரால் அடித்து கொள்வதால் நமக்குள் பிரிவினை ஏற்படுவதை தவிர வேறு என்ன நிகழ்ந்து விட போகின்றது. அவர்கள் மதம் குறித்து பேசுகின்றனர் அதனால் நாங்கள் விமர்ச்சிகின்றோம். என கூறுவதாக இருந்தால். மததை விமர்ச்சிப்பது தவறு இல்லை. அதை நாகரீகமான முறையில் செய்யுங்கள். எல்லா மதமும் விமர்ச்சனத்திற்க்கு உட்பட்டவைதான். ஆனால் ஒரு மதம் குறித்து கீழ் தரமாக எழுதுவதை குறைத்து கொள்ளுங்கள். ஆரோக்யமான அறிவு பூர்வமான கருத்துக்களை மதம் குறித்து முன் வையுங்கள். ஹிட்சை எப்படி வேண்டுமானாலும் அதிகரித்து கொள்ளலாம். ஒரு சாரார் மீது செற்றை வாரி இரைத்து அதன் மூலமாக பெருகின்ற ஹிட்சை வைது என்ன சாதித்து விட போகின்றீர்கள். பதிவுலக நன்பர்களே சிந்தியுங்கள்.