சனி

முஸ்லீம்களே வன்முறையை ஆதரிகாதீர்..!

முஹமது அவர்களை கீழ்தரமாக சித்தரித்து அமெரிக்காவில் ஷாம்பெஷிலி என்ற திரைப்பட இயக்குனரும், டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகரும் சேர்ந்து 'இன்னொசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற படத்தை எடுத்துள்ளனர். அதன் 13 நிமிட வீடியோ காட்சி யுட்யூபில் வெளியாகியுள்ளது. இத்ற்கு உலகம் முளுவதும் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது ஒரு சாதரன நையாண்டி செய்யப்பட்டு எடுக்க பட்டதாக தோன்றலாம். ஆனால் முஸ்லீம்களை பொருத்தவரைக்கும் அவர்களின் மத உனர்வை புன்படுத்தும் விதத்தில் இது அமைந்து உள்ளது. நாமும் அவர்களின் மத உனர்வை மதித்து நமது கண்டனங்களை தெரிவித்து கொள்கின்றோம்.

 

அதே நேரத்தில் ஒரு அமேரிகன் செய்த தவறுக்காக உலகில் உள்ள அனைத்து அமேரிக்க தூரகமும் தாக்க படுவது கண்டிக்க தக்கது. லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்க பட்டது மட்டும் அல்லாது அமெரிக்க தூதரும் கொல்லபட்டுள்ளார். ஒரு அமெரிக்கன் செய்த தவறுக்கு இந்த அமெரிக்க தூதர் கொல்ல படுவது எந்த விததில் சரியானதாக இருக்க முடியும். கொல்ல பட்டவருக்கு பின்னால் அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கும் மனைவி மக்கள் இருக்க கூடும் அவர்களுக்கு இந்த முஸ்லீம்கள் சொல்லும் பதில் என்ன. கொல்லபட்டவரின் மனைவியும் அவர்களின் குழந்தைகளும் ஒரு தந்தையை இன்று இழந்து நின்று கொண்டு உள்ளனர் அவர்களுக்கு இவர்கள் சொல்லும் பதில் என்ன. நான் அந்த அமெரிக்கன் உங்கள் மத உனர்வை புன்படுத்தும் விததில் படம் எடுத்தது தவறு. அதை நானும் ஒத்து கொள்கின்றேன். ஒருவன் செய்த தவறுக்கு மற்றொருவரை கொல்வதை எப்படி நியாபடுத்த முடியும்.

 

இஸ்லாமியர்கள் பொதுவாக ஒரு வாதத்தை முன் வைபார்கள். உலகில் இஸ்லாதின் பெயரால் நடக்கும் தீவிர வாததிற்கும் இஸ்லாதிற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாதை தவறாக புரிந்து கொண்ட சிலர் செய்யும் இது போன்ற காட்டு மிராண்டி தனமான செயல்களுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை குறை கூருவது சரி அல்ல. எல்லா இஸ்லாமியர்களும் வன்முறையை ஆதரிக்க வில்லை என கூறுவார்கள். இது உன்மையும் கூட இந்த கருத்தை நான் ஆமோதிகின்றேன். இஸ்லாம் என்ற பெயாரால் ஒரு சிலர் செய்யும் குற்றதிற்கு எப்படி ஒட்டு மொத்த இஸ்லமியரும் இஸ்லாமும் பொருப்பு இல்லையோ அதே போல் ஒரு அமேரிக்கன் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த அமேர்க்க தூதர்கங்களை தாக்குவதும் அங்கு இருபர்வளை கொல்வதும் எப்படி சரியாக இருக்க முடியும். இஸ்லாமியர்கள் தீவிர வாததிற்க்கு கூறும் அதே அளவு கோல் இதற்க்கும் பொருந்துமே இதை ஏன் இஸ்லாமிய நன்பர்கள் சிந்திபது இல்லை. லிபியாவில் நடந்ததற்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தமிழ் இஸ்லாமிய நன்பர்கள் கூறக் கூடும். நேற்று சென்னையில் அமெரிக்க தூதரகம் தாக்க பட்டுள்ளது. நல்ல வேளை உயிர் சேதம் ஏற்பட வில்லை. நீங்கள் போராடுங்கள் அதை நான் ஒரு போதும் குற்றமாக சொல்ல வில்லை. உங்களின் உனர்வுகளுக்கு நானும் மதிப்பளிகின்றேன். ஆனால் வன்முறையில் இரங்குவது என்பது எந்த விததிளும் நியாயமாக இருக்க முடியாது. போராடுங்கள் உங்களின் கண்டனங்களை தெரிவியுங்கள் அதை அமைதியான முரையில் செய்யுங்கள். அதுதான் உங்களின் மதிப்பை மற்றவர்களிடம் அதிகரிக்க செய்யும்.

 

எனக்கு தனிபட்ட முறையில் அமெரிகா மீதும் அதன் வெளியுரவு கொள்கை மீதும் நல்ல அபிப்ராயம் கிடையாது, அவர்கள் மத்திய கிழக்கில் இருக்கும் எண்ணெய் வழதால் தமது காலனியாதிக்கதை செலுத்த முயல்வதை நானும் கண்டிக்க கூடியவன் தான் அதே நேரதில் ஒருவன் செய்த குற்றத்திற்காக வேறு ஒருவனை தண்டிப்பது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. முஸ்லீம் சமூகம் இனியாவது சிந்திக்க வேண்டும்.


 

17 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

யரோ ஒரு தனிப்பட்ட மனிதரின் மதவெறியை ஒரு நாட்டின் மீதோ அல்லது மற்றவர்கள் மீதே காட்டக்கூடாது..


இஸ்லாமியர்கள் அமைதிகாக்க வேண்டும்..

அந்த படத்தை உலகம் முழுவதும் தடைவிதிக்க வேண்டும்

நன்பேண்டா...! சொன்னது…

உங்கள் நடுநிலைமையான கருதிற்கு நன்றி கவிதை வீதி... // சௌந்தர் //

Unknown சொன்னது…

http://pinnoottavaathi.blogspot.com/2012/09/blog-post_13.html

Riyas சொன்னது…

நீங்கள் சொன்ன விதம் சரிதான்.. வன்முறை தேவையில்லாதது..

நன்பேண்டா...! சொன்னது…

//Riyas சொன்னது…
நீங்கள் சொன்ன விதம் சரிதான்.. வன்முறை தேவையில்லாதது..//

வருகைக்கும் கருதிற்கும் நன்றி Riyas

Unknown சொன்னது…

உங்கள் நடுநிலைமையான கருதிற்கு நன்றி சகோ ..

நன்பேண்டா...! சொன்னது…

//Jazlan Mohamed சொன்னது…
உங்கள் நடுநிலைமையான கருதிற்கு நன்றி சகோ ..//

வருகைக்கும் கருதிற்கும் நன்றி Jazlan Mohamed

Robin சொன்னது…

//இஸ்லாம் என்ற பெயாரால் ஒரு சிலர் செய்யும் குற்றதிற்கு எப்படி ஒட்டு மொத்த இஸ்லமியரும் இஸ்லாமும் பொருப்பு இல்லையோ// இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு இஸ்லாமே பொறுப்பு, ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் பொறுப்பல்ல.

நன்பேண்டா...! சொன்னது…

வருகைக்கும் கருதிற்கும் நன்றி Robin

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

சலாம் சகோ.நண்பேண்டா....

சென்றதும் இதுவும் இவ்விஷயத்தில் வந்த மிக நல்ல நடுநிலையான சிறந்த பதிவுகள்..! தங்களுக்கு மிக்க நன்றி..!

நானும் இந்த லிபிய முஸ்லிம் காட்டிமிராண்டிகளை கண்டிந்து பதிவு போட்டு உள்ளேன்..! அந்த கண்டனம்... சென்னையில் கல் எரிந்தவர்களுக்கும் பொருந்தும்.

அப்புறம், இத்தோடு நான் ஒரே ஒரு கருத்தை மட்டும் உங்களிடம் முன்வைக்கிறேன்..!

அதாவது...

முஸ்லிம்கள் எவரும் லிபிய அமெரிக்க தூதர் கொலைகளையோ... தூதரக தாக்குதல்களையோ இதுவரை ஆதரிக்கவில்லை. மாறாக கண்டிக்கிறார்கள். நான் உட்பட..! ஆனால்... இதற்கெல்லாம் காரணமான... அந்த கழிசடை சாக்கடை படத்தை எடுத்த மிருக மனிதர்களை இன்றுவரை அமெரிக்காவோ... அல்லது ஒரு யூத கிருத்துவ நாடோ கண்டித்தது இல்லை. மட்டுமல்ல..... பாதுகாப்பு கொடுத்து பலமாக ஆதரிக்கிறார்கள்..! இவர்கள் தான்... 'இயேசு பிரானுக்கு சந்ததி உண்டு' என்று புனைவுக்கதை கூறியதாக "டா வின் சி கோட்" படத்தை பலமாக எதிர்த்தவர்கள். பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் அதை கண்டித்து திரையிட தடை போட்டனர்..! அந்த நேர்மை இன்று இவர்களிடம் எங்கே போனது இப்போது...?????

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

இந்த கீழ்த்தரமான ஆபாச அநியாய பித்தலாட்ட அக்கிரம படத்துக்கு... தந்து கடும் ஆதரவை தெரிவிக்கும் அமெரிக்காவுக்கு எதிராக.... உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பகிரங்க எதிர்க்குரலை கொடுக்க... . நினைக்கிறார்கள்..!

இந்த எதிர்ப்பு செய்தி அமெரிக்க அரசுக்கும்... உலக மீடியாவுக்கும் சென்று சேர வேண்டும் என்றால்...... இந்த முழக்கம்போட... இதற்கு சரியான தகுந்த இடம்... அமெரிக்க தூதரகம் முன்னாடிதான்...! இதை... கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு எதிரில் நின்று கோஷம் போட்டால்... அது அறிவீனம் அல்லவா..? :-)

இங்கே... கோஷம் போடும் இயக்கங்கள்... தூதரகத்துக்கும்... அங்கே உள்ள அலுவலர்களுக்கும் எவ்வித ஆபத்தும் நேராத வண்ணம் பொறுப்பேற்க வேண்டும்..! போலிஸ் இதற்கென்று நியமிக்கப்பட்டு உள்ளர்கள்தான்..!

முஸ்லிம்களுக்கு களங்கம் வர வேண்டும் என்றே... சில அமெரிக்க ஆதரவு புல்லுருவிகள் போலிஸ் ஆதரவுடன்... முஸ்லிம்கள் போல் கூட்டத்தில் ஊடுருவி கல்லெறிவார்கள்.. பாம் போடுவார்கள்...!
போலிஸ் அப்போது ஆகிவிடுவார்கள் பொம்மைகள் ஆக..!

இந்த சூழலையும் கண்கொத்தி பாம்பாக இருந்து கவனமாக பார்த்து செய்ய வேண்டிய செயல் இது..! தவறு நடந்தால்... அந்தந்த இஸ்லாமிய இயக்கங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிதான் வரும்..! கடமை தவறிய போலிஸ் மீது பழி வராது..!

'பாதுகாப்பு குடுக்க' என்று குவியும் போலிஸ்... தனது செயலை சரியாக செய்யாமல்... எப்போதுமே... பழியை யார் மீதாவது போட்டுவிட்டு... இதுபோன்ற கலாட்டாக்களில் நைசாக கைகழுவி கழண்டு கொள்வார்கள்... என்பது நாம் அறிந்ததே..!

ஆகவே... முஸ்லிம்கள்தான் இங்கேயும்... மிக கவனமாக இருக்க வேண்டும்..!

பெயரில்லா சொன்னது…

இதனையே தான் நாமும் சொல்கிறோம். ஆனால் யார் கேட்கின்றார்...

Unknown சொன்னது…

நமக்கு ஒருத்தர் நண்பனா இருக்கிறார் என்றால் அவர் ,நம்மை எதிர்க்கிறவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் நம்மிடம் உள்ள குறைகளை சுட்டி காட்ட வேண்டும்...அந்த விதத்தில் நன்பேண்டா.....

நன்றியுடன்
நாகூர் மீரான்

Pebble சொன்னது…

Nice article. Totally make sense. Also please watch the video. This is an advice to Muslims from a Muslim scholar.
http://youtu.be/JEmhUYj88eY

vadakaraithariq சொன்னது…

தனிநபர் உரிமை என்று அமெரிக்கா அந்த செயலை ஆதரிக்கிறது. தனிநபர் உரிமைக்கு என்று ஒரு எல்லை கிடையாதா? ஒபாமா மனைவியை பற்றி இல்லாத ஒன்றை படம் எடுத்து வெளியிட்டால் அவர்கள் தனிநபர் உரிமை என்று விற்றுவிடுவார்களா அல்லது ஆதரிப்பார்களா. இது எல்லாம் திட்டமிட்ட சதிசெயல்கள்.

Unknown சொன்னது…

* வாசர்களே செக்ஸ் படம் பார்க்கனுமா தமிழ் மணம் வாருங்கள்!
* தமிழ் மணத்தில் குடிமி சண்டையை ஆதரிக்கும் பதிவு!
* தமிழ் மணத்தில் இன்றைய கேவலமான தனி நபர் தாக்குதல்!
* தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!
* இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!
* தமிழ் மணம் (நாத்தம்) ஒரு அறிமுகம்!

தமிழ் மணம் குறித்த உங்களது விமர்சனங்களும், விளக்கங்களும் இங்கே வரவேற்க்கப்படுகிறது. தமிழ் மணம் என்கிற மதவாதத்தை, பதிவர்களுக்குள் சண்டையை ஏற்ப்படுத்தும் தமிழ்மணம் இணையதளத்தை புறக்கணித்து விட்டு தமிழ் 10, இன்லி, தமிழ்வெளி, வலைச்சரம், தேன்கூடு, உழவன் போன்ற திரட்டிகளை ஆதரியுங்கள். தமிழ் மணம் என்கிற மாயை மக்கள் மத்தியில் இருந்து ஒழிப்போம். குடமி சண்டை கேவலத்தை வேரறுப்போம். படைப்பாளிகளை மதிக்கும் எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கும் மற்றைய இணையதளங்களுக்கு நமது பதிவுகளை வழங்குவோம். தமிழ் மணத்தை முற்றிலும் புறக்கணிப்போம்.

மேலதிகமான தகவல்களுக்கு - please go to visit

http://www.tamilnaththam.blogspot.com/

விழித்துக்கொள் சொன்னது…

makkal maakkalaaga irukkum varai idhu thodarum
nandri
surendran

கருத்துரையிடுக