ஞாயிறு

மாலேகான் குண்டு வெடிப்பும் ஆர்.எஸ்.எஸ். பங்கும் .!

இந்த நாட்டில் நடக்கும் அத்துணை குண்டு வெடிப்பு மற்றும் தீவிரவாத செயல்களுக்கும் முஸ்லீம்கள் தான் காரணம் என்று ஓயாமல் ஊளையிடும் அனைவரும் கீழ்காணும் இந்த செய்திக்கு  என்ன பதில் சொல்ல போகின்றீர்கள்.

மாலேகான் குண்டுவெடிப்பு- ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கைது

டெல்லி: 2006ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை சனிக்கிழமை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர். இவர் குண்டு வைத்த கும்பலைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மனோகர் சிங், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம், குர்தகேடி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருபவரான மனோகர் சிங், 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி மாலேகான் நகரில் உள்ள ஹமீதா மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார். 

அங்கு சைக்கிள் வெடிகுண்டை வைத்த நான்கு பேரில் இவரும் ஒருவர். இந்தக் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வைத்த நால்வரில் மனோகர் சிங் போக, மற்ற மூவராக ராஜேந்திர் செளத்ரி, ராம்ஜி கல்சங்க்ரா, தான் சிங் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் கல்சங்க்ரா தலைமறைவாக உள்ளார். தான் சிங், செளத்ரி ஆகியோர் 2 வாரங்களுக்கு முன்புதான் கைது செய்யப்பட்டனர். இந்த இருவருக்கும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 மாலேகான் குண்டுவெடிப்பில் முதலில் முஸ்லீ்ம்களைத்தான் விசாரணை அமைப்புகள் சந்தேகப்பட்டு வந்தன. ஆனால் 2010ம் ஆண்டுதான் முதல் முறையாக இதில் இந்து தீவிரவாதம் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலத்திற்கு வந்தது. முதலில் சுவாமி அசீமானந்த் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கைதானார்கள். தற்போது இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது. 

நன்றி: ஒன் இந்தியா.காம்   

வெள்ளி

க.மு க.பி..!


அனைத்தும் முக புத்தகத்தில் பகிரப்பட்டவை


 

புதன்

போற போக்கப் பார்த்தா ஆற்காட்டாருக்கு ஊருக்கு ஊர் சிலை வச்சிருவாங்க போல தெரியுது.

கீழே உள்ள அணைத்து படங்களும் முக புத்தகத்தில் பகிரபட்டவை உங்கள் பார்வைக்காக. 

மின்சாரத்த காணலையாம் யாரவது கண்டுபிடிச்சி குடுங்க அதுக்கு சன்மானமா  கரண்ட் சாக் தந்தாலும் தருவாங்க 



நாடு முழுவதும்னு சொன்னதுல ஒரு சின்ன திருத்தம். தமிழ் நாடு தவிர்த்து நாடு முழுவதும்னு சொல்லி இருந்தா பொறுத்தம இருந்து இருக்கும்.  



ஓ! இவருதான் மின்வெட்டு சாரி மின்சாரத்துறை அமைச்சரா இப்பதானுங்க மொதோ தரம் பாக்குறேன். 

 
 
பேசாம அடுத்த வருடத்தில் இருந்து காலண்டர்ல நல்ல நேரம் எமகண்டம் மாதிரி மின்வெட்டு நேரத்தையும் வெளியிட்டா மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும். 




போற போக்கப் பார்த்தா ஆற்காட்டாருக்கு ஊருக்கு ஊர் சிலை வச்சிருவாங்க போல தெரியுது. 



இதை எல்லாத்தையும் பார்த்துட்டு கடைசில இப்படிதான் போய் எங்கயாவது முட்டிக்கணும் 




செவ்வாய்

அய்யயோ! ரமணன் மழை பெய்யும்னு அறிவிசிட்டாரா

ஒரு மத்திய அமைச்சர் ரூ71 லட்சம் மோசடி செய்தார் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை. ஏனெனில் ஒரு மத்திய அமைச்சருக்கு ரூ71 லட்சம் ரூபாய் என்பது மிகக் குறைந்த தொகையாகும். இதுவே ரூ71 கோடியாக இருந்தால் சீரியசான விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்: மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பேட்டி 
-செய்தி 

அதானே ஒரு லட்சத்தி எழுபாதாயிரம் கோடி எல்லாம் சர்வ சாதரணமாக ஊழல்  செய்து புகழ் பெற்ற எங்களை கேவலம் 71 லட்சம் ஊழல் செய்ததாக சொல்லி எங்கள் புகழுக்கு குந்தகம் விளைவித்தார்னு வழக்கு தொடுத்தாலும் தொடுபாங்க போல. நாட்டு மக்களுக்கு சோத்துக்கே வழி  இல்ல இவுங்க என்னடான்னா 71 லட்சம் எல்லாம் சாதாரணம் அப்படிங்குறாங்க. நாடு வெளங்கிடும். தொடந்து மென்மேலும் கோடி கணக்குல  ஊழல செய்து  சாதனை படைக்கணும்னு நாட்டு மக்களாகிய நாங்கள்  வாழ்த்துகின்றோம்.   



-----------------------------------------------------


வடகிழக்கு பருவமழை 18ம் தேதி துவங்கும்:சென்னை வானிலை ஆய்வு மைய 

 இயக்குனர் ரமணன்

-செய்தி

அய்யயோ! என்னது ரமணன் மழை பெய்யும்னு அறிவிசிட்டாரா. அப்பா கண்டிப்பா மழை வராது. வெயில் மண்டய பொலக்க போகுது. ஏற்கனவே மக்கள் பவர் கட்டால கஷ்ட்ட படுறாங்க இப்ப வெயில் வேற ரண கொடூரமா அடிச்சா மக்கள் என்ன தான் பண்ணுவாங்க. ஆண்டவா ஏன் இப்படி மக்கள மென்மேலும் சோதிக்கிற.  

----------------------------------------------------------

துரை தயாநிதி ஏன் தலைமறைவாக இருக்கிறார் என்று தெரியவில்லை:  கலைஞர் 

கருணாநிதி

-செய்தி 

வரவர நம்ம தலைவரோட காமெடிக்கு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு. அவரோட பேரப்புள்ள  ஏன் தலைமறைவா இருக்காருன்னே நம்ம தலீவருக்கு தெரிலயாமா. என்ன சொல்றதுன்னு தெரியல. என்னமோ போங்க பாஸு 



வெள்ளி

கடுபேத்துறாங்க மை லார்ட்...!

ரயில் பெட்களில் பயணிகளுக்கு பெரும் தொல்லையாக இருக்கும் எலி, கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி ஆகியவற்றை ஒழிக்க, இந்தியாவிலேயே முதன் முறையாக நவீன எந்திரம் சென்னையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.                                                                                                 - செய்தி


அட நீங்க வேற! பயனிகளுக்கு நல்லது செய்வதாக நினைத்து எலி கரப்பான் மூட்டப் பூச்செல்லாம் ஒழிச்சிடாதீங்க. அப்புறம் அந்த ரயில் இந்தியன் ரயில்வேக்கு சொந்தமான ரயில்தானனு மக்களுக்கு சந்தேகம் வந்துரப் போகுது. அதுமட்டும் இல்லாம ரயில்ல கரபானும் எலியும் இல்லைன்னா நம்ம பதிவர்கள் பயண கட்டுரையின் போது ரயில்வே துறையை குறைக் கூறி எழுத மேட்டர் இல்லாம போயிடும். அதனால பதிவர்கள் சார்பாக நம்ம கோரிக்கைய பரிசீலனைக்கு எடுத்து பழையபடி எலி கரப்பானெல்லாம் இரயிலில் உலவ அனுமதிக்கனும்னு கேட்டுகொள்கின்றோம்.

 


=======================================

காவேரி பிரச்சினையால் பெங்களூரில் மாற்றான் படத்துக்கு ஒரு தியேட்டர் கூட கிடைக்கவில்லை! தயாரிப்பாளர்  கவலை.                                          -செய்தி 1


காவேரியில் போதுமான அளவு நீர் வரத்து இல்லாததால் தஞ்சை பகுதி விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் கவலை.                                  - செய்தி 2


போட்ட பணத்த எடுக்க முடியுமா முடியாதான்னு தயாரிப்பாளுருக்கு கவலை. தொடர்ந்து விவசாயம் செய்து காலத்த ஓட்ட முடியுமா முடியாதான்னு விவசாயிகளுக்கு கவலை. பவர் கட்டால மானாட மயிலாட தொடர்ந்து பாக்க முடியலயேனு நமக்கு கவலை. வாழ்கைலதான் எத்தனை கவலை ஓ மை காட்!

 
=========================================

இயர்பியலுக்கான நோபல் பரிசு சேர்ஜே ஹரொசீ (Serge Haroche) மற்றும் டேவிட் ஜெ. வின்லான்ட் (David J. Wineland)

மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு சான் பி.குர்தோன் மற்றும் ஜூல்ஸ் கால்ப்மேன்
                                                                                                                                           -செய்தி


இதேமாதிரி பவர் கட்டுக்கும் ஒரு நோபல் பரிசு தரனும்னு தமிழக மக்கள் சாரிபாக நோபல் பரிசு கமிட்டிக்கு ஒரு கோரிக்கை வைக்கனும்னு கேடுகொள்கின்றோம். அப்படியாவது தமிழகத்துக்கு ஒரு நோபல் பரிசாவது கிடைக்கட்டும்
                                                        

சனி

முஸ்லீம்களே வன்முறையை ஆதரிகாதீர்..!

முஹமது அவர்களை கீழ்தரமாக சித்தரித்து அமெரிக்காவில் ஷாம்பெஷிலி என்ற திரைப்பட இயக்குனரும், டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகரும் சேர்ந்து 'இன்னொசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற படத்தை எடுத்துள்ளனர். அதன் 13 நிமிட வீடியோ காட்சி யுட்யூபில் வெளியாகியுள்ளது. இத்ற்கு உலகம் முளுவதும் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது ஒரு சாதரன நையாண்டி செய்யப்பட்டு எடுக்க பட்டதாக தோன்றலாம். ஆனால் முஸ்லீம்களை பொருத்தவரைக்கும் அவர்களின் மத உனர்வை புன்படுத்தும் விதத்தில் இது அமைந்து உள்ளது. நாமும் அவர்களின் மத உனர்வை மதித்து நமது கண்டனங்களை தெரிவித்து கொள்கின்றோம்.

 

அதே நேரத்தில் ஒரு அமேரிகன் செய்த தவறுக்காக உலகில் உள்ள அனைத்து அமேரிக்க தூரகமும் தாக்க படுவது கண்டிக்க தக்கது. லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்க பட்டது மட்டும் அல்லாது அமெரிக்க தூதரும் கொல்லபட்டுள்ளார். ஒரு அமெரிக்கன் செய்த தவறுக்கு இந்த அமெரிக்க தூதர் கொல்ல படுவது எந்த விததில் சரியானதாக இருக்க முடியும். கொல்ல பட்டவருக்கு பின்னால் அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கும் மனைவி மக்கள் இருக்க கூடும் அவர்களுக்கு இந்த முஸ்லீம்கள் சொல்லும் பதில் என்ன. கொல்லபட்டவரின் மனைவியும் அவர்களின் குழந்தைகளும் ஒரு தந்தையை இன்று இழந்து நின்று கொண்டு உள்ளனர் அவர்களுக்கு இவர்கள் சொல்லும் பதில் என்ன. நான் அந்த அமெரிக்கன் உங்கள் மத உனர்வை புன்படுத்தும் விததில் படம் எடுத்தது தவறு. அதை நானும் ஒத்து கொள்கின்றேன். ஒருவன் செய்த தவறுக்கு மற்றொருவரை கொல்வதை எப்படி நியாபடுத்த முடியும்.

 

இஸ்லாமியர்கள் பொதுவாக ஒரு வாதத்தை முன் வைபார்கள். உலகில் இஸ்லாதின் பெயரால் நடக்கும் தீவிர வாததிற்கும் இஸ்லாதிற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாதை தவறாக புரிந்து கொண்ட சிலர் செய்யும் இது போன்ற காட்டு மிராண்டி தனமான செயல்களுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை குறை கூருவது சரி அல்ல. எல்லா இஸ்லாமியர்களும் வன்முறையை ஆதரிக்க வில்லை என கூறுவார்கள். இது உன்மையும் கூட இந்த கருத்தை நான் ஆமோதிகின்றேன். இஸ்லாம் என்ற பெயாரால் ஒரு சிலர் செய்யும் குற்றதிற்கு எப்படி ஒட்டு மொத்த இஸ்லமியரும் இஸ்லாமும் பொருப்பு இல்லையோ அதே போல் ஒரு அமேரிக்கன் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த அமேர்க்க தூதர்கங்களை தாக்குவதும் அங்கு இருபர்வளை கொல்வதும் எப்படி சரியாக இருக்க முடியும். இஸ்லாமியர்கள் தீவிர வாததிற்க்கு கூறும் அதே அளவு கோல் இதற்க்கும் பொருந்துமே இதை ஏன் இஸ்லாமிய நன்பர்கள் சிந்திபது இல்லை. லிபியாவில் நடந்ததற்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தமிழ் இஸ்லாமிய நன்பர்கள் கூறக் கூடும். நேற்று சென்னையில் அமெரிக்க தூதரகம் தாக்க பட்டுள்ளது. நல்ல வேளை உயிர் சேதம் ஏற்பட வில்லை. நீங்கள் போராடுங்கள் அதை நான் ஒரு போதும் குற்றமாக சொல்ல வில்லை. உங்களின் உனர்வுகளுக்கு நானும் மதிப்பளிகின்றேன். ஆனால் வன்முறையில் இரங்குவது என்பது எந்த விததிளும் நியாயமாக இருக்க முடியாது. போராடுங்கள் உங்களின் கண்டனங்களை தெரிவியுங்கள் அதை அமைதியான முரையில் செய்யுங்கள். அதுதான் உங்களின் மதிப்பை மற்றவர்களிடம் அதிகரிக்க செய்யும்.

 

எனக்கு தனிபட்ட முறையில் அமெரிகா மீதும் அதன் வெளியுரவு கொள்கை மீதும் நல்ல அபிப்ராயம் கிடையாது, அவர்கள் மத்திய கிழக்கில் இருக்கும் எண்ணெய் வழதால் தமது காலனியாதிக்கதை செலுத்த முயல்வதை நானும் கண்டிக்க கூடியவன் தான் அதே நேரதில் ஒருவன் செய்த குற்றத்திற்காக வேறு ஒருவனை தண்டிப்பது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. முஸ்லீம் சமூகம் இனியாவது சிந்திக்க வேண்டும்.


 

வெள்ளி

மதத்தை விமர்ச்சிக்கலாம் நாகரீகமாக..!



 
  
சமீபகாலமாக பதிவுலக நடக்கும் சண்டைகளை பார்க்கும் பொழுது மிகவும் வெருக்க தக்க வகையில் உள்ளது. அந்த சண்டையில் மதம் பிரதான இடம் வகிக்கின்றது. மதம் மனிதனை பக்குவப் படுத்தி அவனை நேர்வழியில் செல்ல வழிவகை செய்ய வேண்டும். மாராக ஒருவர் மீது மற்றவர் ஆதிக்கம் செலுதும் வகையில் அது இருக்க கூடாது. என்னை பொருத்த வரையில் சில மூட பழக்கவழக்கங்களை தவிர மதங்களில் எந்த குறையும் இருப்பதாக படவில்லை. அதை பின் பற்றும் மனிதனிடம்தான் குறை உள்ளதாகவே தோன்றுகிறது. எல்லா மதங்களுமே அமைதியயும் அன்பையும் தான் போதிகின்றன.

 

மததின் பெயரால் ஏன் இத்தனை சண்டைகள். ஒருவர் மற்றவரின் மததை அவமதிப்பது போல் சமீபத்தில் அதிக அலவில் பதிவுகள் வந்து கொண்டு இருகின்றது. நாட்டில் வேரு எந்த பிரசினையும் இல்லயா. பதிவில் எழுத நாட்டில் என்னற்ற பிரசினைகள் நிறைந்து உள்ளது. அது குறித்து பதிவில் எழுதி அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பதிவர்கள் இப்படி மதத்தின் பெயரால் அடித்து கொள்வது யாருக்கு என்ன பயனை கொடுத்து விட போகின்றது. மததை தூற்றி குறிப்பாக முஸ்லீம்களையும் முஸ்லீம் மதத்தையும் விமர்சிகின்றேன் என கீழ் தரமாக எழுதும் பதிவர்கள். உன்மையாக இஸ்லாம் மததை விமர்சித்து அதில் இருக்கும் தவறான விசயங்களை இஸ்லாமிய நன்பர்களுக்கு விளக்க வேண்டும் என்ற என்னம் இருப்பதாக தெரியவில்லை. மாறாக மதம் குறித்து அவதூராக எழுதினால் அதன் மூலம் வாசகர்களின் என்னிக்கை அதிகரிக்கும் என்ற என்னதை தவிர வேறு காரனம் இருப்பதாக தெரியவில்லை.


 

அவர்கள் எழுதும் பதிவில் அவர்களின் சில அடி வருடிகள் ஒட்டு போட்டு அதை தமிழ்மனத்தில் முன்னனி இடுகை பட்டியலில் கொண்டு வர போராடுகின்ரார்கள். இதனால் யாருக்கு என்ன பயன் இந்த பதிவர்கள் சிந்திக்க மறுகின்றனர். மததின் பெயரால் அடித்து கொள்வதால் நமக்குள் பிரிவினை ஏற்படுவதை தவிர வேறு என்ன நிகழ்ந்து விட போகின்றது. அவர்கள் மதம் குறித்து பேசுகின்றனர் அதனால் நாங்கள் விமர்ச்சிகின்றோம். என கூறுவதாக இருந்தால். மததை விமர்ச்சிப்பது தவறு இல்லை. அதை நாகரீகமான முறையில் செய்யுங்கள். எல்லா மதமும் விமர்ச்சனத்திற்க்கு உட்பட்டவைதான். ஆனால் ஒரு மதம் குறித்து கீழ் தரமாக எழுதுவதை குறைத்து கொள்ளுங்கள். ஆரோக்யமான அறிவு பூர்வமான கருத்துக்களை மதம் குறித்து முன் வையுங்கள். ஹிட்சை எப்படி வேண்டுமானாலும் அதிகரித்து கொள்ளலாம். ஒரு சாரார் மீது செற்றை வாரி இரைத்து அதன் மூலமாக பெருகின்ற ஹிட்சை வைது என்ன சாதித்து விட போகின்றீர்கள். பதிவுலக நன்பர்களே சிந்தியுங்கள்.



கடுபேத்துறாங்க மை லார்ட்...!

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்னு தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது யாருக்கு பொருந்துதோ இல்லயோ, நமது ஆட்சியாளர்களுக்கு மிக சரியாக பொருந்தும். இதை பல சந்தர்ப்பங்களில் நம்மை ஆள்பவர்கள் நிருபித்து கொண்டே தான் இருகின்றார்கள். உதாரனதிற்கு ஈமு கோழி வளர்ப்பில் நடந்த மோசடியை எடுத்து கொள்ளுங்கள் ஈமு நிருவனங்கள் இரண்டு ஈமு கோழியை தங்களிடம் இருந்து வாங்கி வளர்தால் போதும் எல்லோரும் அம்பானியாக மாறிவிடலாம் என்ற வகையில் விளம்பரம் செய்தது. அதை ஒத்து ஊதும் விதமாக விளம்பரபங்களில் நடித்த நமது நடிகர்களும் வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கூட சேர்ந்து கூவினார்கள்

. இப்பொழுது பணம் கட்டினால் உங்கள் பெயரில் ஒரு தேக்குமரம் நட படும் இன்னும் இருபது வருடம் கழித்து அந்த தேக்குமரதை விற்று அதில் கிடைக்கும் பணத்தை தருவதாக கூறுவதையே நம்பி பணம் கட்ட தயாராக இருக்கும் நம்ம மக்கள். பணம் கட்டி ஈமு கோழியை வாங்கினால் வருடா வருடம் ஊக்க தொகை தரபடும். அதன் ஒரு முட்டை இரண்டாயிரம் முதல் நாங்காயிரம் விலை மதிக்க தக்கது. அதையும் எங்கள் நிருவனமே விலைக்கு வாங்கிக் கொண்டு உங்களுக்கு பணம் தருகின்றோம். அதன் இரச்சி ஒரு கிலோ ஆயிரம் விலை பொகும் அதற்க்கான பனத்தயும் நாங்களே தருகின்றொம் என கூறினால் அதை நம்பாமல் என்ன செய்வார்கள். அனைவரும் விவசாயத்தை விட்டு விட்டு ஈமுவில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். இந்த விளம்பரங்கள் வர ஆரம்பித்த உடனே நமது ஆட்சியாளர்கள் என்ன செய்து இருக்க வேண்டும். இந்த நிருவனம் செய்யும் விளம்பரம் உன்மைதானா அதன் நம்பக தன்மை எந்த அலவுக்கு சரியானது என விசாரித்து இருக்க வேண்டாமா. ஆனால் நமது அரசோ அந்த விளம்பரத்திற்கும் நாம் ஆட்சி செய்யும் பகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் மெத்தன்மாக இருந்தார்கள். இன்று அந்த நிறுவனம் இழுத்து மூடபட்டு விட்டது. இப்பொழுது அந்த நிருவனம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது.

அதேபோல் பள்ளி பேருந்தில் இருந்து ஒரு குழந்தை தவறி விழுந்து இறந்த பிறகு அனைத்து பள்ளி பேருந்துகளின் தரத்தையும் ஆராய முவந்துள்ளது. பள்ளி பேருந்து குறித்து சட்ட திருத்தம் கொண்டுவருகின்றது. இதை ஏன் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் வரை கண்டு கொள்ளாமல் இருந்தது. இந்த விபதிற்கு முன்பு பள்ளி பேருந்து தரம் குறித்து எந்த சட்டமும் இல்லயா. அதை பின் பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. இனி பள்ளி பேருந்துகளின் தரத்தை உயர்த்துவதின் மூலம் இறந்த ஒரு உயிரை திரும்ப கொண்டு வர முடியுமா, குழந்தையை பறிகொடுத்த பெற்றோரின் துயரத்தை துடைத்து விட முடியுமா. அதேபோல இப்பொழுது அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தையை எலி கடித்த பிறகு எலியை பிடிக்க நடவடிக்கை எடுகின்றார்கலாம்.

ஆட்சியாளர்களின் கடமை மக்களை காப்பாற்ற வெண்டியதுதான். மக்கள் பாதிக்க பட்டவுடன் அவர்களுக்கு நிவாரன நிதி கொடுப்பதும் ஆறுதல் சொல்வதும் அறிக்கை விடுவது மட்டுமல்ல. மக்களை காப்பதும்தான்.