வியாழன்

ராணுவ (வீரன்) கோழை..!

இலங்கையில் நடந்த படுகொலைகளை கானும் பொழுது நெஞ்சம் பதரவே செய்கின்றது. குழந்தைகளும் பெண்களும் இலங்கை ரானுவத்தின் தோட்டாக்களுக்கு இறையாகி ரத்த வெல்லத்தில் கிடப்பதை பார்க்கும் பொழுது உனக்கு இந்த உலகில் வாழ எந்த அளவு உரிமையுள்ளதோ அதே அளவு அவர்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் செய்த குற்றம் என்ன பெரும்பான்மையான சிங்களவர்கள் வாழும் இலங்கையில் சிறூபான்மை இனத்தில் பிரந்ததை தவிர. சிறுபான்மை இனத்தில் பிறந்ததது அவர்கள் செய்த குற்றமா? அவர்கள் விருபப்பட்டுதான் சிறுபான்மை இனத்தில் பிறந்தார்களா?. எங்கு பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரமோ சக்தியோ அவர்களுக்கு இருகின்றதா?. அவர்கள் செய்த குற்றம் என்ன?



 விடுதலை புலிகள் கையில் ஆயுதம் எடுத்தார்கள். அதன் விலைவு அவர்களுக்கு மரனம். புலிகளின் போராட்டத்தை நியாயபடுத்த முடியாது.புலிகளின் ஆட்சி பகுதி என அறிவிக்க பட்ட இடத்தில் அவர்கள் செய்த கொலைகள் என்னிலடங்காதவை. அவர்கள் கொலைகள் மூலம் விதத்ததை அவர்கள் மரனம் மூலமாக அருவடை செய்து இருகின்றார்கள். ஒரு நாட்டை எதிர்து ஆயுதம் தாங்கி போராடும் குழு அந்த நாட்டை பொருத்த வரை தீவிரவாத குழுதான் அதில் மற்று கருத்து இல்லை. அவர்கள் கையில் ஆயுதம் எடுத்து போராடுவது சரி என்றால் மாவோயிடுக்களின் ஆயுதம் தாங்கி போராடும் போராட்டமும் சரியா அவர்கள் தீவிரவாதி இல்லையா. மாவோயிஸ்டுக்கள் தீவிரவாதி இல்லயா அல்லது காஸ்மீரை தனி நாடாக பிரித்து தரவேண்டுமென்று போராடும் காஸ்மீர் தீவிரவாதிகளை என்ன சொல்வது. காஸ்மீரை அவர்களின் அனுமதி இல்லாமல் இந்தியா ஆக்ரமித்து விட்டது என்பது காஸ்மீர் விடயங்கள் தெரிந்த அனைவருக்கும் தெளிவாக தெரியும். அவர்களும் தனி இனம் தான். தனி மொழியுடையவர்கள் தான். அதற்காக காஸ்மீரில் ஆயுதம் தாங்கி போராடும் ஒரு குழுவை தீவிரவாதி இல்லை என சொல்ல முடியுமா.

காஸ்மீரிலும் அஸ்ஸாமிலும் மே.வங்கத்திலும் அவர்கள் இனத்திற்காக போராடினாலும் அவர்கள் தீவிரவாதிகள் தான். கஸ்மீர் தீவிரவாதிக்கு ஒரு அலவுகோள் வைத்து அவர்களை தீவிரவாதி என்றும் விடுதலை புலிகளுக்கு ஒரு அலவு கோல் வைத்து அவர்களை தியாகி என்றும் என்னால் சொல்ல முடியாது. இருவருமே தீவிரவாதிகள் தான். நான் பேசும் மொழி தமிழ் ஆதலால் தமிழர்கள் என்ற அங்கிகாரத்தை வைத்து புலிகள் செய்தது சரி என்று என்னால் பார்க்க முடியவில்லை. என் பொழி பேசுபவர்கள் என் இனம் என் சமூகம் என்று குறுகிய வட்டத்தில் நின்று பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களையும் மனிதர்களாகவே பார்க்க விழைகின்றேன். சிங்களவர் உட்பட.


இலங்கை ரானுவ வீரனே கையில் ஆயுதம் எடுத்து உன்னை கொல்ல வருபவனை நீ கொல்வதில் எந்த தவறும் இல்லை. நீ கொல்லாமல் விட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள். இருவரும் கையில் ஆயுததுடன் போராடும் பொழுது ஒருவர்தான். வெற்றி பெற முடியும் மற்றவர் மரனம் தான் அடைவார். ஆனால் கையில் ஆயுதம் எடுத்து உன்னை கொல்ல வராதவர்களை, உன்னை கொல்ல வந்தவர்களின் மொழி பேசுவதால் அவர்களும் கொல்ல பட வேண்டியவர்கள் என்று எப்படி முடிவெடுத்தாய். அவர்களும் உன் நாட்டை சேர்ந்தவர்கள் தானே அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுபில் இருக்கும் நீ அவர்களை கொல்ல உங்களுக்கு என்ன நேர்ந்தது. ஒன்றும் அரியாத அப்பாவி மக்களை கொன்ற உன்னை எப்படி ரானுவ வீரன் என்று அழைப்பது. உன்னுடன் சண்டையிட வருபர்களை கொன்றால் நீ ரானுவ வீரனே! ஆனால் உயிரை கையி பிடித்து வாழ வழிதேடி ஓடிக்கொண்டிருக்கும் அப்பவிகளையும் பெண்களையும் என்ன நடகின்றது என்று அரியாத குழந்தைகளயும் கொன்ற நீ ரானுவ வீரனா இல்லை. இல்லவே இல்லை. உன்னை ரானுவ வீரன் என்று அழைக்க என் மனது ஒப்புகொள்ள வில்லை. வேண்டுமென்றால் ரானுவ கோழை என்று அழைகின்றேன்.

இந்த உலகு யாருடைய தனி சொத்தும் இல்லயே அனைவருக்கும் பொதுவானது தானே. அந்த உலகில் நீங்களக எல்லைகள், நாடுகள், இனம், மொழி, மதம், என்று ஒருவரை ஒருவர் கொன்று அவர்களின் பினங்கள் உங்களது சாம்ராஜ்யத்தை நிறுவ நினைகின்றீர்கள். இந்த உலகில் யாரும் நிரந்தரம் அல்ல. இலங்கை தமிழன் இன்று இரந்தால் நீ நாலை இரக்க போகின்றாய் அவ்வலவே இந்த குருகிய கால வாழ்கையில் ஏன் இந்த ரத்த வெறி.

1 கருத்து:

MADHANKUMAR சொன்னது…

நண்பரே! கவலை வேண்டாம் உண்மை வெகு நாள் இருட்டில் இருக்காது.நிச்சயம் போர்க்குற்றம் இனவெறியர்களுக்கு மக்கள் மன்றத்தில் தண்டனை கிடைக்காவிடினும் இறைவனிடம் இருந்து தப்ப முடியாது.

கருத்துரையிடுக