ஞாயிறு

கேள்விக் குறியான மக்களாட்சி..!

ஒரு மக்களாட்சி நடை பெரும் நாட்டில் அந்த நாட்டை ஆளும் அரசு எடுக்கும் எந்த கொள்கை முடிவுகளையும் அன்நாட்டு குடிமக்கள் அனைவரும் ஆதரித்து ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. அப்படி கட்டாய படுத்தினால் அது ஜனனாயக நாடாக இருக்க முடியாது. அரசு எடுத்த முடிவு நல்லதாக அந்த மக்களுக்கு தெரிந்தால் ஆதரிக்கலாம். அது அந்த மக்களுக்கு தவறாக தெரிந்தால் அதை எதிர்த்து போராடலாம். அந்த போராட்டத்துக்கான அலவு கோல் என்பது வன்முறையில் இறங்காமல் அமைதியான முறையில் உன்னாவிரதம், பேரணி, கண்டன ஆர்ப்பட்டங்கள் இப்படி எந்த முறையில் வேண்டுமானாலும் போராடலாம். அவர்கள் வன்முரையில் மட்டும் இறங்க கூடாது. இதுதான் மக்களட்சி தத்துவத்தின் ஆனிவேர். வன்முறையில் இறங்காமல் அறவழியில் போராட அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. இதை இந்திய அரசியல் சாசன சட்டமும் உறுதி படுத்துகின்றது.



ஒரு சாரார் கூடங்குளத்தில் அனு உலையை எதிர்த்து போராடுகின்றனர். மற்றொரு சாரார் அனு உலை பாதுகாப்பானது என்று கூறுகின்றனர். அனு உலை பாதுகாப்பானதா இல்லையா என்பது நமக்கு தேவையில்லை. அதை பற்றி விவாதிக்க வேண்டாம். இந்திய அரசின் எந்த ஒரு திட்டத்தையும் மக்களுக்கு பிடிக்க வில்லை என்றால் அதை எதிர்த்து போராட அவர்களுக்கு உரிமையுள்ளது. எதுவரை என்றால் அவர்கள் வன்முரையில் இறங்காது இருக்கும் வரை. அவர்களின் போராட்டம் என்பது அவர்களுக்கு அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமை. அதை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. அவர்கள் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டால் அவர்களை ஒடுக்க அரசுக்கும் காவல் துறைக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் நான் கண்ட வரையில் இந்து முன்னயினர் மற்றும் காங்கிரஸ் காரர்களால் மாவட்ட ஆட்சியர் அழுவலகம் முன்பு அவர்கள் தாக்கப்பட்டது தவிற அவர்களின் போராட்டத்தில் கடந்த ஏழு மாதமாக எந்த வன்முறையும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.

 

அப்படி இருக்கும் பொழுது கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவல் துறை மற்றும் துனை ரானுவமும் அந்த பகுதியில் முகமிட்டு 144 தடை உத்தரவு பிரபித்துள்ளது எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும். அந்த மக்களுக்கு உனவு தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருற்கள் கிடைக்காமல் தடை செய்து இருப்பதை பார்க்கும் பொழுது இது ஜனனாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற ஐயம் எழுகின்றது. மக்கள் அறவழியில் போராடுவது அவர்களின் உரிமை அதை அரசு காவல் துறையை ஏவி அடக்க முற்படுவது ஜனாயகம் என்ற அமைப்பை குழி தோண்டி புதைப்பதை போல் உள்ளது.



ஆளும் அரசின் ஜனனாயகத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கும் இந்த செயலை கண்டித்து எந்த அரசியல் கட்சியும் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்க வில்லை என்பதுதான் உச்ச கட்ட கொடுமை. போராட்ட காரர்கள் அனு உலையை எதிர்த்து போராடுவது தவறாக கூட இருக்கலாம் ஆனால் அந்த போராட்டத்தை இப்படி அரசு ஒடுக்க நினைப்பது மக்களாட்ட்சி தத்துவத்திற்க்கு ஒரு தவறான முன்னுதாரனம் ஆகி விடாதா? இது மக்களாட்சி என்ற பதத்தை பதம் பார்த்து விடாதா? அந்த மக்களின் போராட்டம் தவறு. அனு உலையை துவங்கினால்தான் மின் பற்றா குறையை சரி செய்ய முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனு உலை தேவையானது என்று அரசு கருதும் பட்சத்தில் அதை மக்களுக்கு புறிய வைப்பது அரசின் கடமை. மக்களுக்கு தெளிவாக அனு உலையால் எற்படும் நன்மைகளை அந்த மக்களுக்கு தெரியபடுத்தி அனு உலைபாதுகாப்பானது என்பதை அந்த மக்களும் நிருபித்து அந்த மக்களின் அச்சைத்தை போக்க வேண்டும் அதை விடுத்து காவல் துறையை ஏவி போராட்டைத்தை ஒடுக்குவது மக்களாட்சி என்ற ததுவத்தை குழி தோண்டி புதைபதற்க்கு சமம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக