சனி

தமிழ் நாட்டை தலை கீழாக மாற்றிய தானே..!


ஒரு வழியாக தானே புயல் கரைய கடந்திருச்சி, இந்த வருடத்தின் முதலும் கடைசியுமா இந்த புயல் வந்திருக்கு. ஏற்கனவே பெய்த மழையால ரோடு எல்லாம் குண்டும் குழியுமா இருக்கு இந்த நேரத்துல்ல தானேவால் ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சம் அதிகம் தான். இத அரசு எந்திரம் எப்படி சமாளிக்க போகுதுன்னு தெரியல.  



இந்த புயல் குறித்து ஏகப்பட்ட பில்டப்புகள மீடியா ஏத்தி விட்டுருச்சி   அதுமட்டும் இல்லாம வானிலை அறிக்கை வேற முரண்பட்ட தகவல்கள கொடுத்துக்கிட்டே  இருந்தாங்க. முதல்ல சென்னைக்கும் விசாக பட்டினத்துக்கும் இடைல கரைய கடக்கும்னு சொன்னாங்க. அப்புறம் நாகைக்கும் சென்னைக்கும் இடைல கரைய கடக்கும்னு சொன்னங்க. பிறகு புயல் கரைய கடக்கும் போது வலுவிலந்திரும்னு சொன்னங்க. ஒருவழியா நேத்து காலைல சென்னைக்கும் கடலூர்கும் இடைல கரைய கடந்து விட்டது.



இதனிடையே புயல் அப்டேட் குடுத்தாங்க பாருங்க புயல் 575 கிலோமீட்டர் தூரத்தல இருக்கு 300 க்கு வந்திருச்சி 200 ,100 , 50 , 10 , 5 , 1 , ௦, ஸ்டார்ட் அப்படின்னு கவுண்டவுன் வேற.






 என்ன இருந்தாலும் இந்த புயல் கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி பகுதிகள பொரட்டி தான் போட்டு விட்டது. பல இடங்கல்ல கரண்ட் இல்ல, கைபேசி இணைப்பு துண்டிக்க பட்டு விட்டது. கூரை ஓடு வீடுகளெல்லாம்  புயல் காத்துல ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பா விவசாயிகள் ரொம்பவே பாதிக்க பட்டுளார்கள். 






தை மாச அறுவடைக்கு காத்திருந்த நெல் பயிர் எல்லாம் காத்துல சாஞ்சி நீர்ல மூழ்கிடுச்சி இதனால விவசாயம் கடுமையா பாதிக்க பட்டிருகின்றது. வழக்கம் போல மத்திய மாநில அரசுகளின் வெல்ல சோதனை  குழு வந்து பார்வையிடும் பின் நிவாரணம் வழங்கும். 






மாநில அரசு வழக்கம் போல மத்திய அரசு கொடுத்த நிவாரணம் போதுமானதாக இல்லைன்னு அறிக்கை விடும். இது கால காலமா நடக்குற சம்பிரதாய அறிக்கைதான். பின்பு இதுவும் கடந்து போகும் மக்கள் வழக்கம் போல இதையும் மறந்துடுவாங்க.


எது எப்படியோ புயலால் பாதிக்க பட்ட பகுதி இயல்பு நிலைக்கு திரும்ப கொஞ்ச நாளாகும்னு தான் தோணுது. ஏன்னா இந்த புயலோட பாதிப்பு அப்படி.      


சிம்புவின் கொலவெறி...!


மக்களே.! மக்களின் மக்களை...!  தனுசின் கொல வெறி பாட்டுக்கு போட்டியா நம்ம ஒஸ்தி சிம்பு வெளியிட்டு இருக்கும் இந்த பாட்டு தனுஷின் கொலைவெறி பாடல் அளவு வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். பொறுத்திருந்து பாப்போம்.

தணுஷே கொல வெறி பாடல் இந்த அளவு வெற்றி பேரும்னு எதிர் பார்த்திருக்க மாட்டார். இணையதில பார்த்தா ஏகப்பட்ட கொல வெறி ரீமிக்ஸ் வந்துகிட்டு இருக்கு. அது மட்டும் இல்லாம ஜப்பான் அதிபர் மற்றும் நம்ம மன்மோகன் சிங் கூட நம்ம தனுஷ் விருந்து உண்ணுகின்ற அளவுக்கு தனுஷுக்கு வாய்ப்பு இந்த பாட்டு ஏற்ட்படுதி குடுத்திருக்கு.

இந்த நேரத்துல இன்னொரு விசயத்த உங்களோட்ட பகிர்ந்துக்க நெனைக்கிறேன். துள்ளுவதோ இளமை படம் வரும்போது தனுசுன்னு ஒரு நடிகர் இந்தளவு வருவார்ன்னு நான் நேனைகல  நீங்களும் நெனச்சி இருக்க மாடீங்கன்னு நம்புறேன்.




தனுஷுக்கு ரொம்ப நல்ல நேரம் இருக்குது போல, ஏன்னா துள்ளுவதோ இளமைக்கு அப்புறம் காதல் கொண்டேன் அப்படின்ற படம் வந்துச்சி அந்த படத்துக்கு ஏனோ அவரோட உடல் அமைப்புக்கு ஒத்து போய்டுச்சி,  அதனால படம் சூப்பர் ஹிட், அந்த படம் தான் நமக்கு தனுஸ் யாருன்னு அறிமுக படித்தியது அது மட்டும் இல்லாம சேல்வ ராவகன்ர ஒரு நல்ல இயக்குனரையும் அறிமுபடித்தியது (அவர்  நல்ல இயக்குனர்தான்றதுல  மத்தவங்களுக்கு மாற்று கருது இருக்கலாம் ஆனால் இது என்னுடைய பார்வை).   

   



அதுக்காக தனுஸ் நடிச்சது எல்லாம் ரொம்ப நல்ல படம்னு சொல்லமுடியாது, ஏன்னா உங்களுக்கே தெரியும் புதுகோட்டையிலர்ந்து சரவணன், சுள்ளான், (இந்த படங்கள பத்தி இப்ப நெனைச்சாலும் முடியல ) போன்ற படங்கள நல்ல படம்ன்னு சொல்ல முடியாது. அதுக்கு அப்புறம் தனுஸ் தனக்கு எந்த மாதிரி படங்கள் சரி வரும் அப்படின்றத ரொம்ப சரியா முடிவெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அது மட்டும் இல்லாம நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட மருமகன் அப்படின்ற பெரும் அவர் வளர்ச்சிக்கு உருதுனையா இருந்திச்சி (தமிழ் நாட்ல இருக்குறவங்களுக்கு தெரியாது. நார்த் இந்தியா இருகின்றவர்களுக்கு தனுச்ன்னு சொன்னா யாருக்கும்  தெரியாது ரஜினி மருமகன்னு சொன்னா தான் தெரியும் ).






அந்த நடிகரோட நடிப்புல வந்த ஆடுகளம் மூலமாக தான் ஒரு சிறந்த நடிகன்னு நிருபிச்சி தேசிய விருது வாங்கினாரு, இப்ப கொல வெறி மூலமா மன்மோகன் சிங் கூட விருந்து சாப்பிடும் அளவுக்கு வளர்ந்திருக்காறு வாழ்த்துக்கள் தனுஷ்.

நம்ம சிம்பு என்னடான்னா இவரும்  ஒரு பாட்டு வெளியிற்றுகாரு அது என்ன பாட்டுன்னு நீங்களே பாருங்க,   


அதுக்காக சிம்பு நல்ல நடிகர் இல்லன்னு சொல்ல முடியாது. ஆனால் அவருக்கு வாயிலையும் கையிலயும் சனி உக்கார்ந்து  இருக்கு அதுல மட்டும் கொஞ்சம் கவனமா இருந்தா சிம்புவும் நல்ல நடிகரா வர வாய்ப்பு உள்ளது (பவர் ஸ்டார், ரித்தீஷ் போன்ற பல நடிகர்கள உச்சாணி கொம்புக்கு கொண்டுபோன சினிமா உலகம் நம்ம சிம்புவ மட்டும் கை விட்றுமா என்ன)

டிஸ்கி:   தனுஷ புகழ்ந்து பதுவு போடறதால என்ன தனுஷ் ரசிகன்னு நெனசிட வேண்டாம். சுள்ளான் படம் பார்த்து தனுஷ் மேல கொலவேரியான ஆயிரகனக்கனங்கவல்ல நானும் ஒருவன்



திங்கள்

ஜெ. வரலாறு காணாத அதிரடி..!

அதிமுகவினர் தங்களது கனவிலும் எதிர்பார்க்க முடியாத ஒரு செயலை முதல்வர் ஜெயலலிதா இன்று செய்துள்ளார். தனது ஆருயிர்த் தோழியான சசிகலாவை அதிமுகவை விட்டு அதிரடியாக தூக்கி எறிந்துள்ளார். சசிகலா மட்டுமல்லாமல் அவரது மன்னார்குடி குடும்ப வகையறாவையே ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு தூக்கி விட்டார்.




தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சி அலைகளையும் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை படு வேகமாக பரப்பியுள்ளது.



முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,



அதிமுக தலைமைக் கழக செயலாளர் சசிகலா, எம்.நடராஜன் (சசியின் கணவர்), வி.என்.சுதாகரன் (சசியின் அக்காள் மகன்), வி.என். திவாகரன் (சசியின் அக்காள் மகன்), டிடிவி தினகரன் (சசியின் அக்காள் மகன்), பாஸ்கரன் (சசியின் அக்காள் மகன்), டாக்டர் வெங்கடேஷ் (சசியின் உறவினர்), ராவணன் (சசியின் உறவினர்), அடையார் மோகன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுகின்றனர்.



இவர்கள் யாரோடும் கட்சியினர் எந்த நிலையிலும் எந்தவிதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 

வெள்ளி

ஏதாவது பின்விளைவு ஏற்பட்டால் கம்பெனி பொறுப்பல்ல.



மக்களே! மக்களின் மக்களே! நீங்க வாழ்க்கைல எவ்வளவோ கொடுமை அனுபவித்து இருப்பீங்க ஆனா இப்படி ஒரு கொடுமைய அனுபவித்து இருக்க மாட்டீங்க, புதுகோட்டைல இருந்து சரவணன்   படத்த்துல நம்ம அபர்ணா என்னமா இந்த பாட்டுக்கு ஆடி இருக்கும் ஆனா இங்க ஒன்னு ஆடுது அந்த கொடுமைய நீங்களே பாருங்க



எச்சரிக்கை:

இந்த வீடியோவை பார்த்து தாங்கல் கண்களுக்கும் உடலுக்கும் ஏதாவது பின்விளைவு ஏற்பட்டால் கம்பெனி பொறுப்பல்ல. 








Face book update


வெண்ணிலா கபடிக் குழு பரோட்டா காமெடி ரீ-மேக். விஜய் : அப்பா 


போதும் 50 படம் ஃபிளாப் கொடுத்தாச்சு.. எஸ்‌ஏ‌சி : டேய் நல்லா எண்ணிப் 


பாருடா 49 தான்டா ஃபிளாப் கொடுத்திருக்கே.. விஜய் : நடிச்ச எனக்குத்


 தெரியாதா 50 படம் ஃபிளாப்னு? எஸ்‌ஏ‌சி: டேய் படம் பார்த்த எனக்குத் 


தெரியாதா 49 படம் ஃபிளாப்னு? விஜய் : முடியாது...முடியாது... நீங்க கள்ள 


ஆட்டம் ஆடறீங்க.. எல்லா டைரக்டர்களையும் கூப்பிடுங்க.. நான் 


மறுபடியும் நடிக்கிறேன்.. எஸ்‌ஏ‌சி : மறுபடியுமா????????????????????????????







திங்கள்

செல்போன் தத்துவங்கள்..!!

சில மொக்கைகள் செல்போனிலும் வரும் அப்படி என்னக்கு வந்த சில மொக்கைகள் உங்கல் பார்வைக்கு தந்துள்ளேன்.



செல்போனில் வந்த தத்துவங்கள்.

1. நமக்கே தெரியாத
நம்மை பற்றிய ரகசியங்களை
நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும்
சிறந்த கருவிதான்.....
........
சரக்கு...!


2. உயிரோட இருக்குறப்ப என்னதான்
காம்ப்ளான், போன்விட்டா,
ஹார்ளிக்ஸ், பூஸ்ல்ன்னு குடிச்சாலும்
உயிர் போனால்
எல்லோர்க்கும் 'பால்'தான்!

இதுதான் கன்னா வாழ்க்கை!


3. பல நாட்டு குட்மார்னிங்

யூ.கே - ஹை... டியர்
யூ.எஸ்.ஏ - குட் மார்னிங்
சைனா - மிஹெள
ஜப்பான் - ஸேஹெள
இத்தாலி - மணிச்சி
ஃப்ரான்ஸ் - ஸான்சே

ஆனா
தமிழ்நாட்ல..?
- சனியனே 8.30 மணி ஆச்சு எழுந்திருடா...!


4. ஒரு மரத்தில 6 பறவை உட்கார்ந்திருந்தது.
வேடன் சுட்டான். 5 பறவை பறந்திருச்சி
ஒண்ணு மட்டும் பறக்கலை ஏன்? ஏன்?
..........
.......என்னா அதுக்கும் உன்ன மாதிரி கொழுப்பு!
நோ..... நோ..... டென்ஷன் ஆகப்பிடாது கண்ணா!


5. தத்துவம் நெ. 1161
நமக்கு பிரச்னை இல்லைன்னா கடவுளுக்கு அர்ச்சனையே இல்ல...
...........
ஹாஹாஹா.... இது எப்படி இருக்கு?


தெலுங்கு குட்டி..!!!

ஒரு படத்தை மற்ற மொழியை தழுவி எடுக்கலாம், அதர்த்காக ஒவொரு காட்சியையும் அப்படியே அந்த படத்திளிளிருந்து காப்பி அடிப்பது ஒரு  படைப்பாளியின் திறமையின்மையே தவிர வேறு என்ன சொல்வது, வேறு மொழி படத்தின் தாக்கத்தில் அந்த கதையை தழுவி தனது திறமையான திரை கதை மூலம் தான் ஒரு படைப்பாளி தனது திறமையை நிரூபிக்க வேண்டும். இப்படி அப்பட்டமாக ஒவொவொரு காட்சியையும் காப்பி  அடிக்க கூடாது, நீங்களே பாருங்கள் அந்த கொடுமையை,

தெலுங்கிலிருந்து ரீமேக் பன்னிய தெலுங்கு குட்டி

சனி

ரோபோடா! ரோபோடா!

அடுத்து ரோபோ ரீமிக்ஸ் கண்டு கழியுங்கள்

பொதிகை மலை..!

மக்களே மக்களின் மக்களே..!பொதிகை மலை உச்சியிலே நீங்களும் கண்டு கழியுங்கள்...!

வெள்ளி

அய்யோ தற்கொலயா..?

எல்லோரும் கொசுவத்தி சுத்துராங்க அதான் நானும் கொஞ்சம் சுத்தலாம்னு முடிவு பன்னிட்டேன் (யாருப்பா அது மொரைகிரது அப்படி எல்லாம் பாக்கபிடாது சரியா) நானும் மொக்க போடனும் மொக்க போடனும்னு நெனகிரேன் முடியல ஆன இன்னக்கி முடிவோட வந்து இருக்கேன், படிக்கிர உங்க கன்னுல எல்லம் பொக வர வைக்காம விடுரது இல்லனு முடிவு பன்னிட்டேன் ( யாருப்பா அது இவுரு பெரிய விஜய் ஒருமுற முடிவு பன்னிட்ட மாதிக்கவே மாடாருன்னு சொல்ரது) சரி சரி ரொம்ப மொக்க போட்ரனா ஒகே விசயத்துக்கு பொகலாம்.

ஒரு பத்து வருசத்துக்கு முன்னலா நான் கல்லூரியில் படிக்கிர காலத்துல (அப்பாட நாமலும் காலேஜ் எல்லாம் படிச்சத சொல்லியாச்சி வரலாறு முக்கியம்ல அதான் பதிவு பன்னிட்டேன்) எல்லா பசங்களயும் போல நாமலும் ஒரு செட்டு வெச்சிக்கிட்டு (பெரிய சேவிங் செட்டு) அலப்பர பன்ரது ஊர் சுத்தர்துன்னு ஜாலியா பொய்கிட்டி இருந்தது. அப்ப மாடல் எக்ஸாம் அதனாள இந்த வீக் யாரும் ஊருக்கு போகக் கூடாது எல்லோரும் இங்கயே ரூம்ல தங்கி எக்ஸாம்க்கு படிக்கனும்னு ஏகமனதா முடிவு பன்னிட்டோம்.

நாம படிக்கனும்னு முடிவு பன்னிட்டாலும் அப்படியே படிசிட்டு தான் மருவேள பாப்போம் பாரு வலக்கம் போல ஒரு நாதாரி அரம்பிச்சான் எலேய் இந்த எக்ஸாம் என்ன செமிஸ்டர் எக்ஸாமா? மாடல் எக்ஸாம் தன்னே அதுக்கு ஏண்டா எல்லோரும் இப்படி ஃபிலிம் காற்றீங்க வாங்கடா நம்ம ஜோதிக்க அக்கா நடிச்ச சினேகிதியே படம் ஒடுது நைட் போய்ட்டு வரலாம்னு ஒரு பிட்ட போட்டான் அந்த நாதாரி. சரி நைட் சினிமா போய்டுவோம்னு ஒருவளியா முடிவு பன்னிட்டு கிண்டலும் கேலியுமா வலக்கம் போல அரட்ட போய்ட்டு இருங்க்கும்போது ஒருதன் அடுத்த பிட்ட போட்டான் மாப்ள நம்ம கெமிஸ்ட்றி சுரேஷ் லாஸ்ட் வீக் கொடைக்கானல் போய்ட்டு வாந்தான்ல பக்கா கிலைமட்னு சொன்னாண்டானு திரிய கிலிச்சி போட அப்படியே பத்திகிச்சி.

நைட் ஜோதிகா அக்காவ பாத்துட்டு அப்படியே பஸ் ஏர வேண்டியதுதன் நளைக்கு விடியர்து கொடைகானலாதான் இருக்கனும்னு சங்கத்துல முடிவு எடுதாச்சி. எங்க செட்ல ஒரு சாம்பாரு அதுமட்டும் நா படிக்கோனும் மாடல் எஃஸாம்ல நல்ல மார்க்கு எடுத்தா செமிஸ்டர் எஃஸாம் ஈசியா இருக்கும் அப்படின்னு சொன்னுசி லூசு. அவனாடா நீயி அப்ப ரூம பத்ரமா பாத்துக்க அப்புறம் இன்னொரு முக்கியாமான விசயம் நல்லா படிச்சி மாடல் எஃஸாம்ல யுனிவெர்சிடி ரேங்க் எடுக்கனும் சரியானுட்டு நாங்க நாலு பேரும் கெளம்பிட்டோம்.

வெள்ளி நைட் சினிமா முடிச்சி பஸ்ஸு ஏறி சனி, ஞாயிறு கொடைக்கனல்ல சுத்திட்டு ஞாயிறு நைட் பஸ்ஸ புடிச்சி திங்கள் காலைல காலேஜ் வந்து எஃஸாம் எழுதனும்னு பிளான். கொடைக்கனல்ல ரெண்டு நாள் சுத்திட்டு ஞாயிறு நைட் 9.30 இருக்கும் பஸ்ல ஏறி வத்தலகுண்டுக்கு டிக்கட் வாங்கிட்டு அசதில அப்படியே ஒக்கார்ந்து இருக்குந்தோம். பஸ்ஸும் கெலம்பிடிச்சி காலைலேர்ந்து ஊர் சுத்துன அசதில அப்படியே எல்லோரும் தூங்கிட்டோம். வழியில பஸ்ஸு ஒரு எடத்துல நின்னுச்சி. கொடைக்கானல் மலை ஏரும்போது ஒரு எடத்துல டீ குடிக்க நின்னுச்சி. திரும்பி வரும்போதும் ஒரு எடதுல பஸ் நின்னது அந்த நேரத்துல தூங்கிட்டு இருந்த நான் மட்டும் கன்ன முழிச்சி பார்தேன், பஸ் டீ கட முன்னால நின்னது நான் மட்டும் கீழ எரங்கி போய் கடைல நாலு டீ சொல்லிட்டு திரும்பி பார்த்தா பஸ்ஸக் கானோம்.

கடகாரர்கிட்ட விசாரிச்சா அவரு இது பஸ் ஸ்டாப், டீ குடிக்க நிப்பாற்ற இடம் இல்லனு சொல்லிட்டாரு நைட் 10.30 மனி கொஞ்ச நேரதுல அவரும் கடைய மூட ஆரம்பிசிட்டாரு அந்த நேரம்பார்த்து கொடைக்கனாலுக்கு போர பஸ் ஒன்னு வந்த்தது, சரி எதுக்கு இந்த நடுக்காட்ல நிக்கனும் பேசாம இந்த பஸ்ஸ புடிச்சி கொடைக்கானல் பஸ்டாண்ட் பொய்டுவோம் அங்க இருந்து வேர பஸ் புடிச்சி மலய விட்டு கீல பொய்டலாம்னு முடிவு பன்னி பஸ்டாண்ட்க்கு 11.00 மனிக்கு போய்ட்டேன்.

அங்க போனா ஒரு பஸ்கூட இல்ல அக்கம் பக்கம் விசார்ச்சா லாஸ்ட் பஸ் 9.30க்கு போய்டுசின்னு சொன்னாங்க, ஆஹா! நாம போனதுதான் கடைசி பஸ் போல. சரியான குளிறுவேர ரூம் போட்டு தங்கலாம், ஆனா நாளைக்கு காலைல எஃஸாம் என்ன பன்ரதுன்னு ஒன்னுமே புரியல. பக்கதுல்ல இருந்த கடகாரர் கிட்ட விசயத்த சொன்னதும் அவர் ஒரு ஐடியா கொடுதார். ஒரு ரோட்ட காட்டி அந்த ரோட்ல நேரா போய் ரைட் எடு அப்புரம் லெஃப்ட் எடுன்னு என்னமோ சொன்னாரு அப்படி போனா மூஞ்சிக்கல்னு ஒரு ஏரியா வரும் அங்க இருந்து காய் கறி ஏதிகிட்டு லாரிங்க எல்லம் போகும் அதுல எப்படியாவது மலைய விட்டு எரங்கிடீங்கன்னா அப்பால நீங்க வேர பஸ்ஸ புடிச்சி போய்டல்லம்னு ஒரு பக்கா ஐடியா கொடுதார்.

சரின்னு நானும் அவர் காட்ன வழியில மூஞ்சிக்கல்ல நோக்கி வேகமா நடக்க ஆரம்பிச்சேன், பயங்கரமான குளிறு கை கால் எல்லாம் நடுக்க ஆரம்பிச்சிருச்சி. கூட வந்த நாதாரிங்க, ஒருத்தன் கானாம போய்ட்டானேன்ற அக்கற கொஞ்சம் கூட இல்லாம விட்டுட்டு போய்டானுவலேன்ர கடுப்புல வேக வேகமா மூஞ்சிக்கல்ல நோக்கி நடந்திக்கிடு இருக்கேன். அந்த நேரத்துல்ல வழியில ஒரு மூனு ஆலுங்க வந்தாங்க அவிங்கல பாக்கும் போது உள்ளூர் காரங்க போல தெரிஞ்சது, அவிங்க எங்கிட்ட ரொம்ப மரியாதயா தம்பி இந்த நேரத்துல இந்த வழியில எங்க போரீங்க அப்படின்னு கேட்டங்க, எனக்கு ஏற்கனவே குளிறு + பசங்க வேர விட்டுட்டு போய்ட்டனுங்கன்ற கடுப்புல நான் எங்க போனா உனக்கு என்ன உன் வேலய பாருன்னுட்டு நடக்க ஆரம்பிசேன். வில்லங்கம் ஆரம்பிச்சிடுச்சி அந்த மூனு பேரும் என்ன புடிசிக்கிட்டாங்க. உன்மைய சொல்லு என்ன பிரச்ன உனக்கு வீட்ல எதாவது பிரச்னயா அல்லது எதாவது பரிச்சைல பெயிலாயிட்டயா அல்லது காதல் தோல்வியா என்ன பிரச்சினை ஏன் தற்கொல பன்னிக்க போற அப்படின்னு சொன்னதும் எனாக்கு பக்குனு தூக்கி போட்டுச்சி என்னாது தற்கொலய்யா யாருயா சொன்ன உனக்குனு உன் வாய்ல வசம்ப வெச்சி தேய்க்க அப்படின்னு மனசுல நெனசிக்கிட்டு இதுக்கு மேல வேலைக்கு ஆகாது எல்லா விசயதயும் சொல்லிட வேண்டியதுதான்னு எல்லாத்தயும் சொல்லிடேன்.

அதுக்கு அவைங்க கேட்டங்க பாரு ஒரு கேள்வி எப்பா தல சுத்த ஆரம்பிசிருச்சி. என்னாது மூஞ்சிக்கல் போரியா இப்படியே போனா யெமலோகம் தான் போவ மூஞ்சிக்கல் போக மாட்டன்னாங்க என்னய சொல்ரன்னு வெவரம் கேட்டா நீ போய்ட்டு இருகுர ரூட்ல இன்னும் கொஞ்சம் போனா பெரிய பல்லம் தான் இருக்குன்னாங்க ஆஹா வழி தவரிட்டோம் போலன்னு நென்ச்சிகிட்டு இல்ல அந்த கடைகாரர்தான் சொன்னருன்னு சொன்னா நம்ப மாற்றாங்க, என்னப்பா நீயி டூர் வந்தேன்னு சொல்ர ஆன ஒரு லக்கேஜ் பேக் இல்ல ஒன்னும் இல்ல எப்படி நம்பர்துன்னு கேக்குராங்க யோவ் எல்லா பேக்கும் பசங்கலோட பஸ்ல போயிடுசியான்னு சொன்னா நம்ப மாற்றாங்க, உன்மய சொல்லு எங்க ஏரியால தற்கொல நடகர்த எங்கலால அனுமதிக்க முடியாது, உன்மைய சொல்ரயா இல்லய போலீஸ் ஸ்டேசன் வரயா அப்படின்ராங்க என்னாது போலீஸ் ஸ்டேசனா என்னடா தொல்லயா போச்சின்னு ஐயா ராசா தற்க்கொலை எல்லம் பன்னிக்க வரல டூர் தான் வந்தோம் நம்பிக்க இல்லனா இந்தா என் காலேக் ஐடி கார்ட் பாருன்னு குடுத்தேன் ஐடி பார்துட்டு சரி ஒகே வா உன் காலேஜிக்கு போன் பன்னுவோம் அவிங்க ஒரு பிரசினயும் இல்லன்னு சொன்ன விட்டுரோம்ன்னு சொன்னானுவ, யோவ் மனி என்ன ஆகுது பாருங்கயா நைட் 1.30 இந்த நேரத்துல காலேஜ்ல ஒரு ஈ கக்கா கூட இருக்கது அங்க போன் பன்னி என்ன பன்ரது.

வேனும்னா ஒன்னு பன்னுங்க எங்க வீட்டு நம்பர் தர்ரேன் எங்க வீட்ல எந்த பிரசினையும் இல்லன்னு சொன்னா என்ன விட்டுடனும்னு ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் போட்டுட்டு வீட்டு நம்பெர் குடுத்தேன். இப்ப போல செல் போன் எல்லாம் அப்ப கெடையாது ஒரே வழி டெலிபோன் பூத்தான் நடுராதிரில போய் ஒருதன எழுப்பிட்டு வந்து பூத்த தொரந்து எங்க வீட்டுக்கு கால் பன்னி எந்த பிரசினையும் இல்லன்னு சொன்னதும் தான் நம்பினாங்க.(வீட்ல எனக்கு வண்டி வண்டியா அர்சன கெடைச்சது எல்லாம் தனி கதை) ஒகே சரி என்ன விடுங்கடா நா போரேன்னு சொன்னா ரொம்ப நேரமாய்டுசி இதுக்கு மேல மூஞ்சிக்கல்ல எந்த வண்டியும் இருக்காது, அதானால இங்க நைட் தங்கிட்டு காலைல கெலம்புங்கன்னு சொன்னங்க குலிரு தாங்க முடில ஒகேன்னு சொல்லிட்டேன் அவிங்கலே ஒரு ரூம் அரேன்ஃஜ் பன்னி கம்பலி போர்வை எல்லாம் குடுத்தாங்க நல்லா தூங்கி காலைல எழுந்தேன் டீ வாங்கி குடுதாங்க சுடுதன்னி இருக்கு வெனும்னா குலிங்கனாங்க ஆனா நா குலிக்கல கைகால் மட்டும் கலிவிட்டு கெலம்பிட்டேன் காலை டிஃபன் வாங்கி கொடுதுட்டு பஸ் ஏத்தி விட்டாங்க ஒரு வழியா ரூம் வர்ரதுக்கு சாயங்காலம் அகிடுச்சி ரூம் வந்ததுமே பசங்க மெல செம கடுப்பு இப்படி பாதில்ல விட்டுட்டு வந்துட்டங்கலேன்னு, ரூம் வந்து பார்தா படிக்கிர புல்ல சாம்பாரு அதான் டூர் வரல படிக்கனுன்னு சொன்னுச்சே அதே சாம்பாரு தான் தலைல ஒரு குண்ட தூக்கி பொட்டுச்சி.

என்னென்னா சாம்பாரு சொன்னுச்சி என்ணடா மாப்ல நீ மட்டும் வந்துருக்க உன் கூட வந்தவங்க எல்லாம் எங்கடா ன்னா பாருங்க எனக்கு ஒன்னும் புரியால, என்னாது இன்னும் அவங்க ரூம்முக்கு வரலயா என்னடா சொல்ற ன்னா ஆமா அவங்க எஃஸாம்க்கு கூட வரல அப்படின்னு சொன்னா சாம்பரு. அப்புரம் ஒரு வழியா நைட் 10.00 மனிக்க அந்த மூனு பேரும் வந்தாங்க வந்தவிங்க என்ன பார்த்து ஷாக் ஆய்ட்டாங்க, என்னடா இங்க இருக்கேன்னு, அப்புரம் தற்க்கொல பன்னிக்க போன விசயத்த எல்லம் சொன்னதும் அவிங்க என்ன சொன்னங்க தெரியுமா பஸ்ல கொஞ்சம் தூரம் போய்ருக்கங்க அப்ப பார்து ஒருதன் தூக்கத்லேர்ந்து முலிச்சிருக்கான் என்ன கானோன்னதும் அங்கயே பஸ்ஸ நிப்பட்டி கண்டக்டர் கிட்ட விசாரிசதும் நா முன்னால ஒரு ஊர்ல எரங்குன விசயத்த சொல்லியிருக்காரு அவுங்க உடனே பஸ்ஸ விட்டு எரங்கி லாரி புடிச்சி நா பஸ்ஸ விட்டு எரங்கின எடத்துக்கு வந்திருக்காங்க என்ன அங்க கானோன்னதும் எங்க எங்கயோ தேடியும் கெடைகலன்னதும் கொடைக்கனல் போலீஸ் ஸ்டேசன் போய் கம்ப்லைண்ட் பன்னிட்டு அவங்க கூடயும் போய் தேடியிருக்கங்க அப்பயும் கெடைக்கல, உடனே போலீஸ் அங்க்கில் சொல்லி இருக்காரு காலேஜ் பசங்கலா வேர இருகீங்க எங்க பார்தாலும் தேடியாசி இன்னும் கெடைக்கல இதுக்கு மேல ஏதாவது பல்லதுல்ல பாடி கெடைக்குதானு செக் பன்னிடு சொல்ல்ரோம் நீங்க கெலம்புங்கன்னு சொல்லியிருக்காரு நம்ம பய புல்லைங்க அழுதுகிட்டே ஊர் வந்து சேர்ந்துருக்குங்க. அப்புரம் கொடைகானல் போலீஸ் ஸ்டேசனுக்கு போன போட்டு ஆள் கெடைச்சிருச்சி தேட வேனாம்னு சொன்னோம். இந்த அனும்பவத்த என்னால எப்பவும் மரக்க முடியாது.

டிஸ்க்கி: மருனாள் காலேஜ்ல நாலு பேரும் ஆலுக்கு ஒரு மெடிகல் சர்டிஃபிகேட் வாங்கிட்டு போய் எங்க துறை தலைவகிட்ட போய் நின்னது, அதுக்கு அவரு அது எப்படிடா எப்ப பார்தாலும் உங்க நாலு பேருக்கு ஒன்ன உடம்பு சரி இல்லம ஆகுதுன்னு கேட்டத சமாலிச்சாது எல்லாம் தனி கதை.

செவ்வாய்

சுயத்தை தொலைத்த ஊட்டி!





இன்றய சூழ்னிலயில் நாம் எல்லோரும் கவலை பட வேண்டிய விசயம் என்று பார்தோமேயானால் மக்களாகிய நாம் இயற்கை நமக்கு அளித்த இயற்கையெனும் சொத்தை பாதுகாக்க தவறிவிட்டோம் என்றுதான் தோன்றுகிரது. ஏன்னென்றால் சமீபத்தில் ஊட்டி என்னும் இயற்கை பிரதேசதிற்கு (அப்படியென்று நினைத்து) சென்றிரறுந்தேன். இயற்கை அன்னை இருகரம் நீட்டி அழைகின்றாள் என்று எழுத மனம் வரவில்லை அங்கு கண்ட காட்சிகள் மனதிற்கு நிம்மதி தருவதற்கு பதிலாக வெருமையை மட்டுமே கொடுத்தது.




ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்றபொழுது அந்த பச்சை போர்திய மலைகளும் அதன்மேல் விரவிகிடக்கும் அடர் காடுகளும் ஓங்கி வளர்ந்த நீலகிரி மரங்களும் அதனூடக தவழ்ந்து வரும் தென்றலயும் உனர்ந்த பொழுது இது ஒரு தனி உலகமோ என்று என்னதோன்றும். அங்கு வாழ்பவர் எல்லாம் ஏதோ புன்னியம் செய்தவர்களாக கடவுள் தேசத்து சொந்தக்காரர்கலாக எனக்கு தெரிந்தார்கள்.




ஆனால் இந்தமுறை சென்ற பொழுது ஏதோ பசுமை இருகின்றது ஆனால் அந்த பசுமையினுள் இருக்க வேண்டிய ஜீவன் இல்லை என்றே எனக்கு என்ன தோன்றுகிறது. எங்கு பார்தாலும் காங்க்ரீட் கட்டிடங்கல். அந்த கட்டிட அமைப்புகளை கானும் பொழுது முறையான அனுமதி பெறப்பட்டுதான் கட்டபடுகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிற்க்க முடியவில்லை.
எங்கு பார்தாலும் மக்கள் கூட்டம் வாகன நெருக்கடி வியபாரிகளின் கூச்சல் என ஊட்டியே அல்லோலப் படுகின்றது. இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் அங்கு வரும் மக்கள் கூட்டம் உன்மையில் இயற்கையை நேசிக்க வந்து இருந்தால் எந்த பிரசினையும் இல்லை.




ஆனால் அங்கு வந்திருக்கும் பெரும்பான்மயனவர்கள் இயற்க்கையின் மீது ஆர்வம் அற்றவர்களாகவே வருகிரார்கள் அவர்களின் பார்வையில் இயற்க்கயை ரசிப்பதென்பது ஓ! வென கூட்டமாகா கத்துவதும் மது அருந்துவதும் தான் அவர்கள் வந்த சுற்றுலாவின் நோக்கம் என்பதாக நினைதிருக்கிறார்கள். இன்று பெரும்பான்மயானவர்கள் இயற்கையை அதன் போக்கில் சென்று அனுபவிப்பது இல்லை,




மாறாக நாம் இயற்கை செல்வத்தை வீனாக்கிகொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் மேற்க்கு தொடற்ச்சி மலை என்னும் ஒரு அற்புதமான மலை தொடர் பசுமையோடு ஒரு காலத்தில் இருந்தது என நாம் நம் சந்ததிகளுக்கு தகவலாக மட்டும் தான் சொல்ல முடியுமே தவிற அவர்களாள் உனர்வு பூர்வமாக அந்த இயற்கை அன்னயை கான முடியாமல் போய்விடுமோ என்று பயம் ஏற்படுவதை தவிற்க்க முடியவில்லை.




உண்மையில் இயற்க்கை தனது சுயத்தை இழந்து கொண்டு வருகின்றதா அல்லது இயற்க்கை குறித்த எனது பார்வை மாறி வருகின்றதா என என்னுள் பல கேள்விகள் விடை தான் கிடைக்க வில்லை

ஞாயிறு

மனதை கொள்ளை கொள்ளும் மூனார்.









செவ்வாய்

அமெரிக்காவின் ஜனநாயக அக்கறை..!

“எகிப்து உண்மையான ஜனநாயகத்தை நோக்கி செல்வதை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்பு நிலவுகிறது. எங்களுடைய நிலையும் அதற்கு ஆதரவானதுதான். அதனை மிக வலிமையாக ஆதரிக்கிறோம், அது விரைவில் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று அமெரிக்க அயலுறவுச் செயலர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

தன்னை உண்மையான ஜனநாயகத்தின் நண்பன் என்று காட்டிக்கொள்வதற்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அமெரிக்கா மிக லாவகமாகவும், தனக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக்கொள்ளும் என்பதற்கு அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு ஹில்லாரி அளித்த இந்தப் பேட்டியும் ஒரு சான்று.


எகிப்து அதிபராக இருந்த அன்வர் சதாத் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிபரான ஹோஸ்னி முபாரக், கடந்த 30 ஆண்டுக்காலமாக ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்ததை எதிர்த்து அந்நாட்டில் பல மக்கள் இயக்கங்கள் நடைபெற்றுள்ளது. அப்படிப்பட்ட போராட்டங்களில் அமெரிக்க அரசு யார் பக்கம் நின்றது என்பதெல்லாம் எகிப்து மக்களுக்கு நன்றாகவே தெரியும். எகிப்து இராணுவத்திற்கு எண்ணிலடங்கா சலுகைகளை அளித்து, அவர்களை எப்போதும் ‘குஷி’யில் ஆழ்த்திவிட்டு, பல பில்லியன் டாலர்களை கொள்ளயடித்து அயல் நாட்டு வங்கிகளில் கொண்டுசென்று முபாரக் குவித்தபோதெல்லாம் வராத ஜனநாயக அக்கறை இன்றைக்கு வந்துள்ளது அமெரிக்காவிற்கு!

முபாரக் ஆட்சியை அமெரிக்கா ஆதரித்து வந்ததற்கு அதற்கு பல காரணங்கள் உள்ளன:

(1) எகிப்து இராணுவத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 1.3 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் = 100 கோடி = ரூ.4,500 கோடி) கொடுத்து வந்தது அமெரிக்க அரசு.

(2) தனது செல்லப்பிள்ளையான இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்த முதல் அரபு நாடு எகிப்து.

(3) மத்திய கிழக்காசிய எண்ணெய் வளங்களை அயல் நாடுகளுக்கு கொண்டு செல்ல அதி முக்கியத் தேவையான சூயஸ் நீர் வழியை உறுதி செய்ய எகிப்து தேவை. அதுமட்டுமின்றி, டிரான் நீரிணை, அக்குவாபா வளைகுடா ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை நிலைநிறுத்துவது.

(4) எகிப்து இராணுவத்தின் முழு ஒப்புதலுடன் இஸ்ரேல் விமானப் படை நடத்திய காசா- எகிப்து எல்லையிலுள்ள ஃபியாடெல்பி பாதையில் அமைந்திருந்த இரகசிய சுரங்கங்களின் மீதான தாக்குதல். எகிப்து எல்லையில் நடந்த இத்தாக்குதலில் ஒரு எகிப்து இராணுவ வீரன் கூட காயமடையவில்லை!

(5) ஈரானிடன் அணு ஆயுதம் உள்ளதாக மிக அதிகமாகவே அமெரிக்கா பயமுறுத்துகிறது என்று கூறிய பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவர் எல் பராடீயை (இவர் எகிப்தைச் சேர்ந்தவர்) மீண்டும் அவ்வமைப்பின் தலைவராக வராமல் தடுத்தது.

(6) எல்லாவற்றிற்கும் மேலாக, தனது மத்திய கிழக்காசிய கொள்கைகளுக்கு (கொள்கைகளுக்கு) நிபந்தனையற்ற ஆதரவளிக்கும் எகிப்து அரசை (முபாரக் ஆட்சி) விட்டுத் தர முடியாது என்று அமெரிக்கா கூறி வந்தது.

எகிப்து நாட்டு மக்கள் ஹோஸ்னி முபாரக்கை சர்வாதிகாரி என்கிறார்கள், “அவரை நான் சர்வாதிகாரி என்று கூற மாட்டேன்” என்கிறார் அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடன்!

ஆக, இஸ்ரேலிற்கு எதிரான வலிமையான இராணுவத்தை கொண்ட ஒரு அரபு நாட்டை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அதனால் இஸ்ரேலிற்கும், மத்திய கிழக்காசியாவில் தனது பொருளாதார நலன்களுக்கும் எந்த பாதிப்பும் வந்தவிடாமல் காப்பாற்றிக்கொள்ளவும், அதனைத் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளும் ‘பரந்த’ நோக்குடனேயே எகிப்து அரசிற்கு பில்லியன் கணக்கில் அள்ளிக்கொடுத்து முபாரக் நடத்திய சர்வாதிகார ஆட்சிக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தது அமெரிக்கா. 1967 இஸ்ரேல் எகிப்து போருக்குப் பின்னான கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தையில் எகிப்து மொக்கையாக்கப்பட்ட பின்னர், அது உருவாக்கிய கிழக்காசியத் திட்டத்தின் பாதுகாவலர்களில் முபாரக் மிக முக்கியமானவர்.

இன்று எகிப்து நாட்டின் இளைஞர்கள் ‘இஸ்லாமிய சகோதரத்துவம்’ என்கிற அமைப்பின் மூலம் உருவாக்கிய மக்கள் எழுச்சி, கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றி, மக்கள் கோவமாக வெடித்து 18 நாட்களில் முபாரக் ஆட்சியை சாய்த்தவுடன் ஜனநாயகப் பாடலை பாடுகிறது அமெரிக்கா. இதே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு, அரசின் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், அதனை பயங்கரவாதம் என்று கூறி, ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நுழைந்ததைப் போன்று உள்ளே நுழைந்து மற்றொரு இரத்தக் கிளறியை ஏற்படுத்த அமெரிக்கா தயங்கியிருக்காது.


FILEஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளார் சதாம் ஹூசேன் என்று கூறி, அங்கு படையெடுத்து, தான் அளித்த இராசாயண ஆயுதங்களைக் கூட கண்டெடுக்க முடியாத நிலையில், “நாங்கள் ஈராக் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்” என்று கூசாமல் பேசிய ஜார்ஜ் புஷ்ஷின் வார்த்தைகளை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

இன்று, “முபாரக் காலம் முடிந்துவிட்டது. அங்கு உண்மையான ஜனநாயகத்தை நிறுவுவதற்கான பணிகளை முன்னெடுக்கும் நேரம் வந்துள்ளது” என்று ஹில்லாரி கிளிண்டன் பேசுவதும், அடுத்த வரும் ஆட்சியையோ அல்லது ஆட்சியாளரையோ தங்கள் ஆளாக மாற்றும் நோக்கம் கொண்ட வார்த்தைகள்தான் என்பதை எகிப்து மக்கள் அறிய வேண்டும். தனக்கான ஆட்சியை, தனது பொருளாதார நலன்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆட்சியை நிறுவும் ‘ஒரே நோக்கம்’ கொண்டதே அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கை என்பது.

அது உறவு கொள்ளும் நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறதா அல்லது அங்குள்ளவர்கள் ஜனநாயக ஆட்சியாளர்கள்தானா என்கிற வினாவிற்கு விடைகளை தேடிக்கொண்டு அமெரிக்கா உறவை ஏற்படுத்திக்கொள்வதில்லை. மாறாக, தனது வசதிக்கான நாட்டையே அது நண்பனாக பார்க்கிறது. உண்மையான ஜனநாயக அக்கறை அதற்கு இருந்திருக்குமென்றால், அது முஷாரஃப் அரசுடன் வாஞ்சையோடு கொஞ்சியிருக்குமா?

தெற்காசிய பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என்கிறது இந்தியா, அதனை பயங்கரவாதத்திற்கு எதிரான நண்பன் என்கிறது அமெரிக்கா. ஆனால், அமெரிக்காவுடனான உறவை உச்சிமேல் வைத்து புளங்காகிதம் அடையும் பிரதமர் மன்மோகன் சிங் அரசு, ‘அதெப்படி அவர்களும் நண்பர்கள், நாங்களும் நண்பர்கள்?’ என்று வினா எழுப்பவில்லை! அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கையை புரிந்தவரல்லவா நமது நாட்டின் பிரதமர்? இல்லையென்னால் அந்நாட்டு நிறுவனங்களின் நலன் காக்க அணு விபத்து இழப்பீடு சட்டத்தை நிறைவேற்றுவாரா?


FILEஎனவே இன்றைக்கு எகிப்தின் அடுத்த தலைவர் யார் என்பதை தெரிவு செய்யும் ஒரு மிகப் பெரிய சவால் அந்நாட்டு மக்களுக்கு உள்ளது. மக்கள் புரட்சியை ஆதரித்ததற்காக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவராக இருந்த மொஹம்மது எல் பராடீ உள்ளிட்ட பலர் தலைமையை நிரப்ப முன்வரலாம். எகிப்து மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எகிப்து மக்களைப் புரிந்த, மக்களோடு வாழ்ந்துவரும் தலைவர் ஒருவரை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இல்லையெனில், 21வது நூற்றாண்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள் ஜனநாயகப் புரட்சி பயன்றறதாகப் போய்விடும்.

LINK:http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1102/15/1110215054_2.htm

வியாழன்

நறுமுகையே நறுமுகையே..!




நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதாறள நீர்வடிய கொட்டிறப்
போய்கை ஆடியவள் நீயா

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்டிறப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா

மங்கை மான்விழி அம்புக்ள்
என் மார்த்துளைத்ததென்ன
பாண்டிநாதனைக் கண்டு என்
மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை

யாயும் யாயும் யாராகியறோனென்று நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழி அரிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்டிறப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதாறள நீர்வடிய கொட்டிறப்
போய்கை ஆடியவள் நீயா



எனக்கு பிடித்த வைரமுத்தின் கவிதை இந்த வரிகளை படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் மனதிற்கு ரொம்ப பிடிக்கும்

ஆடம்பரம்..!










(GOLD CAR)
ஒருபுறம் உன்ன உணவின்றி மக்களின் பட்டினி சாவு சர்வ சாதரணமாக நடந்து கொண்டு இருக்கிறது.
இன்னொருபக்கம் இப்படி பணம் படைத்தவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
இதை பொருளாதார வளர்ச்சி என்பதா? அல்லது பொருளாதார வீக்கம் என்பதா?
எல்லா மக்களும் ஒரேமாதிரி வளர்ச்சி அடைந்தாள்தான் அது வளாச்சி
பணக்காரன் மட்டும் ஒருப்பக்கம் வளர்ந்து ஏழை வளராமல் இருந்தால் அதை எப்படி ஆரோக்கியமான வளர்ச்சி என்று சொல்ல முடியும்? அது வீக்கம் தானே அது உடலுக்கும் நல்லதல்ல உலகுக்கும் நல்லதல்ல.





புதன்

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே..!


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
என்னூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்

கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...



என்னக்கு பிடித்த கலைஞரின் கவிதை

செவ்வாய்

உலகின் பிரமாண்ட கட்டிடம்..!










இதுதான் தற்பொழுது கட்டி முடிக்க பட்ட உலகின் பெரிய கட்டிடம்
ஆடம்பர விரும்பிகள் பணத்தை எப்படிஎல்லாம் செலவு செய்கிறார்கள் என்று பாருங்கள் மக்களே

திங்கள்

துபாய் வியாபார திருவிழா!

(DUBAI SHOPPING FESTIVAL)











இதோ தொடங்கி விட்டது துபாய் வியாபார திருவிழா

துபாய் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது

இருந்த போதும் கடந்த கால திருவிழாபோல் அல்லாமல் இது உற்சாகம் இன்றி இருப்பதற்கு பொருளாதார மந்தநிலையும் ஒரு காரணம்

எப்படி இருந்தாலும் திருவிழா களைகட்டியுள்ளது


சனி

எப்பூடி..?









எப்பூடி நாங்களும் வித்தியாசமான படம் எல்லாம் போடுவோம்ல
ரவுடி தான் நானும் ரவுடி தான் சொல்லிபுட்டேன்
சரி மக்க கொஞ்சம் ஆணி புடுங்குற வேல இருக்கு பொறவு பாப்போம்
நானும் ரவுடி தான்

வியாழன்

சிறுத்தை - ஒரு பார்வை..!






அடுத்தது எல்லோரும் சிறுத்தை ஒருமுறை பாருங்க

என்ன மக்க சிறுத்தை எப்படி இருக்கு நல்ல இருக்கா?

காவலன் - ஒரு பார்வை..!





எப்பூடி....!!!!!!!!!


என்ன மக்கா நல்லா பாதுக்கங்கோ இதுதான் காவலன்



மக்கா ஒரே ஒரு பார்வைதான் பாக்கணும் புரியுதா



இதெல்லாம் ஒரு பொழப்பு போங்க மக்கா போய் புள்ள குட்டிங்கள படிக்கவைங்க அத உட்டுபுட்டு காவலன் பாக்க வந்திடீங்க


புதன்

காண்டாமிருகம்

மேற்கு உலகிற்கு முதன்முதலில் அறிமுகமாகிய காண்டாமிருகம் இந்திய காண்டாமிருகம் ஆகும். போர்த்துகிய முதலாம் மானுவேல் பத்தாம் போப் லீயோவுக்காக ஒரு காண்டாமிருகத்தை கப்பலில் அனுப்பி வைத்தான், ஆனால் எதிர்பாராவிதமாக அக்கப்பல் பயணத்தின் போது விபத்துக்குள்ளானது. அக்கப்பலில் இருந்த ஒரு ஓவியர் காண்டமிருகத்தின் படத்தை வரைந்து வைத்திருந்தார். அப்படத்தை அடிப்படையாக வைத்து ஆல்பிரெஃக்ட் டியுரே காண்டாமிருகத்தின் மர அச்சு ஒன்றை செதுக்கினார். இது புகழ் பெற்ற ஓர் படிவம். இவர் இவ் விலங்கைப் பார்க்க வாய்ப்பு இல்லாமலே செதுக்கியது குறிப்பிடத்தகுந்தாகும் மற்றும் இப்படிவத்தில் காண்டாமிருகத்தின் ஒரு சில பாகங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன;


உடலமைப்பு

தற்போது உலகிலுள்ள காண்டாமிருகங்களிலேயே உடலளவில் மிகப்பெரிய இரண்டு காண்டாமிருகங்களில் இந்திய காண்டாமிருகமும் ஒன்றாகும். அதிக அளவாக ஆணின் தோள்பட்டையின் உயரம் சுமார் 180 செ.மீ வரை இருக்கும். சராசரி ஆணின் உயரம் 170 செ.மீ சுற்றளவு 335 செ.மீ ஆகும். இவ்விலங்கின் வெளிப்புறம் கடினமான தோலினால் பல மடிப்புகளைக் கொண்டதாகும். தோலின் புறநிறம் பழுப்பு நிறத்திலும் மடிப்புகளுக்கிடையே வெளிறிய சிவப்பு நிறத்திலும் காணப்படும். இவ்விலங்கு நீர் குட்டைகளில் இருப்பதால் உடலில் பெரும்பாலான பகுதி சேற்றுப்பூச்சைக்கொண்டிருக்கும்.இவ்விலங்கில் கண்கள், காதுகள் மற்றும் வாலின் நுனிப்பகுதி தவிர்த்து வேறு எங்கும் மயிர்கள் இராது. வாலின் நீளம் ஏறத்தாழ 70 செ.மீ ஆகும். ஆண் கொம்பன்களுக்கு கழுத்தின் அருகில் தோலினால் ஆன மடிப்புகள் தோன்றும்.


காண்டாமிருகத்தின் கொம்புநன்கு வளர்ந்த ஆண் பெண்னை விடக் கூடுதல் எடையைக் கொண்டிருக்கும். ஆண் 2200 முதல் 3000 கிலோ வரையும் பெண் 1600 கிலோ எடையில் இருக்கும். மிக அதிகபட்சமாக 3500 கிலோ எடையுள்ள விலங்கு ஒன்று காணப்பட்டதாக தரவுகள் கூறப்படுகிறது. கொம்பு ஆணிலும் பெண்ணிலும் காணப்படினும் பிறந்த குட்டிகளில் காணப்படுவதில்லை. இதன் கொம்பு கெராட்டின் எனப்படும் நகமியம் அல்லது கொம்புறை அல்லது நகமஞ்சளம் என்றழைக்கப்படும் பொருளாளால் ஆனதாகும். இதன் கொம்புகள் மனிதரின் நகங்களைப் போன்ற பொருளால் ஆனது. கன்றுகள் பிறந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவற்றின் கொம்புகள் வெளிப்படும். பெரும்பாலான வயதுவந்த விலங்குகளுக்கு கொம்பு ஏறத்தாழ 25 செ. மீ நீளம் வளரும்.[31]. அதிகபட்சமாக சில விலங்குகளில் 57.2 செ.மீ கணக்கிடப்பட்டுள்ளது. இதன் கொம்புகள் கறுப்பு நிறத்தை கொண்டவையாகும். உயிரினக்காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளுக்கு காட்டில் வாழும் காண்டாமிருகங்களுக்கு இணையாக கொம்புகள் வளருவதில்லை.


சமூகவாழ்க்கை


இந்திய காண்டாமிருகம் சிறுதொலைவுக்கு மணிக்கு 40 கி.மீ வேகமாக ஓடக்கூடிய திறன் படைத்ததாகும். இந்த விலங்கு மிகக் கூர்மையான மோப்ப மற்றும் கேட்கும் திறனைப் பெற்றது, ஆனால் இதன் பார்க்கும் திறன் மிகக் குறைவாகும். இவை பெரும்பாலும் தனித்து வாழும் இயல்பைக் கொண்டதாயினும் குட்டி ஈன்றபின் குட்டி தாயுடனே இருக்கும், இனப்பெருக்கம் செய்யும் பிணைகளும் ஒன்றாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியில் வாழும் விலங்குகள் அனைத்தும் சில நேரங்களில் குளிக்கும் இடங்களில் ஒன்று சேரும். ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொள்கின்றன. சராசரியாக ஒரு ஆணின் எல்லை 2 முதல் 8 சதுர கிலோ மீட்டர் வரையிலும் இருக்கும். முனைப்பான ஆண்கள் இனப்பெருக்க காலத்தில் தங்களுடைய எல்லைக்குள் வேறு ஆணை அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் எல்லை மீறலினால் ஒன்றுக்கொன்று கடும் சண்டையிடும். இவ்விலங்கின் நடவடிக்கைகள் இரவு மற்றும் விடியற்காலையில் அதிகமாக இருக்கும். பெரும்பாலான பகல்பொழுதை அருகிலுள்ள குளம், ஏரி அல்லது ஆறு போன்ற நீர்நிலைகளில் புரண்டு கழிப்பன. இவை பெரும்பாலும் சதுப்புநிலங்களில் வாழ்வதால் நீரில் நன்றாக நீந்தக்கூடியவை. ஒலி எழுப்பி தன் இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும். இத்தகைய ஒலிகள் பத்து வகைகள் என்று இன்று வரை அறியப்பட்டுள்ளது. இவை ஒரு முறை சாணி போட்ட இடத்தை எப்பொழுதும் பயன்படுத்தும் பண்பை உடையது. இப்பண்பினால இதனை வேட்டையாடுபவர்கள் ஒரு சாணிக்குவியலை கண்டுபிடித்து அதன் அருகே விலங்கின் வருகைக்காக காத்திருந்து விலங்கு வந்தவுடன் கொன்றுவிடுவார்கள்.

அட்டை, தொள்ளுப் பூச்சி மற்றும் இழைப்புழு போன்றவை காண்டமிருகத்தின் புறத்தோலில் இருக்கும். சில நேரங்களில் இப்பூச்சிகளால் பல்வேறு தொற்று நோய்கள் காண்டமிருகத்தைத் தாக்குகின்றன. மேலும் காண்டமிருகத்தை ஆந்திராசு மற்றும் தோலில் நுண்ணுயிர் மரித்தல் போன்ற வியாதிகளும் தாக்கும்.

உணவு


இவ்விலங்கு புல், இலை, பழங்கள் மற்றும் நீர்ச்செடிகளைத் உண்கிறது. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் மேயும். இதன் முகத்தின் மேல்தட்டையை வைத்து புதர்களில் உள்ள புற்களை மடக்கி பின் மென்று தின்னும் பழக்கத்தைக் கொண்டதாகும். தாய் விலங்குகள் சிலசமயங்களில் குட்டிகளுக்கு ஏற்றவாறு புற்களையும், புதர்களையும் காலாலோ அல்லது உடலலோ அழுத்தி மடக்கிக் கொடுக்கும். இவ்விலங்கு பெரும்பாலும் தன் சிறுநீர் கலந்த நீரையே உட்கொள்ளும்.

இனப்பெருக்கம்


இவை வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். உயிரினக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் 4 ஆண்டுகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றது, ஆனால் காடுகளில் உள்ளவை 6 ஆண்டுகளுக்கு மேலே மட்டும் இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் ஆதிக்கம் செலுத்தும் திடமான ஆண்களை சமாளிக்கவேண்டி மிக அதிகமான உடல் வலு தேவைப்படுகிறது. ஆதலால் 6 அகவைகளைத் தாண்டிய பின்னரே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சில வேளைகளில் வலுவான இரண்டு ஆண் கொம்பன்களுக்கிடையே ஆதிக்கம் செலுத்த வேண்டி சண்டைகள் நடப்பதுண்டு, இச்சண்டைகளின் போது பலம் குறைந்த விலங்கு இறப்பதும் உண்டு. ஆப்பிரிக்க காண்டமிருகங்களைப் போல கொம்பினால் முட்டாமல் இவை முன்வாய்ப் பற்களால் எதிரிகளைக் கடிக்கும்.

இவ்வினத்தில் புணர்ச்சிக்கான ஏற்பாடு பெண் விலங்கால் தொடங்கப்படுகிறது. புணர்ச்சி கொள்ள நினைக்கும் பெண் சேர்க்கைக்கு உவப்புடன் இருக்கும் ஆணைச் சுற்றியோ அல்லது அதனை அடுத்தோ நின்றுக் கொண்டு மிக உரக்க ஒலி எழுப்பும். மேலும் அடிக்கடி சிறுநீரை வெளியேற்றியும், ஆணை முட்டியும் புணர்ச்சிக்கு அழைக்கும். ஆண் விலங்கானது பின் பல மணி நேரத்திற்கு பெண்னை துரத்திச் செல்லும். பின் களைப்படைந்த பெண் ஓர் இடத்தில் நிற்கும் போது புணர்ச்சி தொடங்கும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் 15.7 மாதமாகும். ஒரு கன்று ஈன்று மன்றொன்றைப் பெறுவதற்கான இடைவெளி 34 முதல் 51 மாதங்களாகும்.

தாய் தன் கன்றைப் பிற ஆண்கள் அண்டாதவாறு காக்கும். கன்றின் அருகில் ஆண் காண்டாமிருகங்கள் வந்தால் உடனே அதை விரட்டிவிடும். கன்று முதல் நான்கு வருடங்களுக்கு தன் தாயுடனே வாழும். பின் தாயைப் பிரியும் பொழுது தன் வயதுடைய ஆண் கன்றுகளுடன் சேர்ந்துக் கொள்ளும். கன்றுகள் பருவநிலை அடையும் வரை ஆதிக்கம் செலுத்தும் ஆண்களிடம் இருந்து விலகியே இருக்கும். இவை ஒன்றை ஒன்று மோப்பம் மூலமும் அடையாளம் கண்டுக்கொள்ளும்.

எப்பூடி நாங்களும் பதிவு போடுவோம்ல!