புதன்

வங்கி ஊழியர்கள் மட்டும் வானிலிருந்தா குதித்தார்கள்?

மக்கள் தங்கள் சேமிப்புகளை அரசு வங்கியில் சேமிப்பது பெரிய வட்டி கிடைக்கும் என்ற நோக்கில் அல்ல. அப்படி பெரிய வட்டி வேண்டுமென்றால் தனியார் நிதி நிறுவனங்களில் சேமைத்து இருப்பார்கள். அவர்கள் அரசு வங்கியில் சேமிபதன் நோக்கம் வட்டிக்க அல்ல தாம் கஷ்ட்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணம் வீட்டி வைத்திருப்பது பாதுகாப்பானது அல்ல. அதை அரசு வங்கில் செமித்து வைத்தால் அதை அரசிடமே கொடுத்து வைப்பது போன்றது. நமது பணத்துக்கு அரசே பாதுகாப்பு கொடுக்கும். அரசின் பாதுகாப்பும் மற்றவர்களின் பாதுகாப்பை விட சிறந்ததாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான்.


ஆனால் மக்களின் எதிர்ப்பார்ப்பை வங்கிகள் நிரைவேற்றுகின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் வங்கி ஊழியர்கள் தமது வடிக்கையாலர்களிடம் நடந்து கொள்ளும் முறை மிகவும் கண்டிக்க தக்க முறையில் இருகின்றது. இதை நானே நேரடியாக பார்த்துளேன். இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் ஒரு எழுபது வயது மதிக்க தக்க முதியவர் பென்சன் வாங்குவதர்க்காக வந்திருப்பார் போல. அந்த முதியவர் வங்கி ஊழியரிடம் தமது கனக்கு புத்தகத்தை நீட்டியவாரு தமக்கு பென்சன் வந்து விட்டதா என கேட்டார். அதற்க்கு அந்த வங்கி ஊழியர் அந்த பெரியவரின் கனக்கு புத்தகத்தை கூட கையில் வாங்காமல் "தேதி அஞ்சி தானே ஆவுது அதுகுள்ள நோட்ட தூக்கிகிட்டு வந்துட்ட போ போ போய் பதினஞ்சி தேதிக்கு மேல வா தொர என்னமோ பனத்த பேங்குள போட்டு வச்சிருக்க மாதிரி வந்துட்டாரு"  இந்த வார்த்தையை கேட்ட அந்த முதியவரின் முகம் வாடிவிட்டது. பொதுமக்கள் நிரைந்த அந்த பொது இடத்தில் தமக்கு ஏற்பட்ட அவமானத்தை என்னி எந்த அளவுக்கு அந்த முதியவர் கூனி குறிகியிருப்பார். வங்கி பனியில் இருந்து விட்டால் என்ன அவர்கள் வானில் இருந்தா குதிதார்கள். அந்த முதியவரும் அரசு பனியில் இருந்து ஓய்வு பெற்றவராகதான் இருக்க வேண்டும். நாளை இந்த வங்கி ஊழியரும் ஓய்வு பெரும் நாள் வரும் அந்த முதியவருக்கு வந்த நிலமை இந்த வங்கி ஊழியருக்கும் வேறொரு வங்கி ஊழியாரால் வரும் வறலாறு திரும்பும். தமிழகத்தில் வங்கியுடன் தொடர்பு வைத்திருக்கும் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். வங்கி நடவடிக்கையில் ஒரு படிவத்தை தவறாக பூர்த்தி செய்து கொடுத்துவிட்டால் போதும் அதற்கு அந்த ஊழியர் எப்படி நடந்து கொள்வார்கள் என்று.

அவர்கள் நாம் வங்கியில் போட்டு வைத்திருக்கும் பனத்தை வெளியில் வட்டிக்கு விட்டு தான் சம்பளம் வாங்குகின்றார்கள் என்பதை ஏனோ மறந்து விடுகின்றார்கள். நாம் அவர்களின் வங்கியில் கனக்கு வைக்கவில்லை என்றால் அவர்களுக்கு அங்கு வேலையே இருக்காது. ஏதாவது மலிகை கடைக்கு கனக்கு பிள்ளையாகதான் போக வேண்டுமென்பதை மறந்து செயல் படுகின்ரனர். அரசு பனியில் இருந்தால் என்ன மனிதாபிமானத்தை அரசு அழுவலகத்தின் வாசலில் புதைத்து விடுவார்களா?

அடுத்து வங்கியில் நாம் செமித்து வைக்கும் பனம் அங்கு பாதுகாப்பாக தான் உள்ளதா. சமீபத்தில் சென்னையில் ஒரு வங்கியில் பட்ட பகலில் கொல்லை சம்பவம் நடந்துள்ளது. அந்த வங்கியில் கங்கானிப்பு கேமராக்கள் கூட இல்லாமல் இருந்துள்ளது. காவல்துறை பல முறை வங்கியில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்துங்கள் என்று அறிவுறித்தியும் கண்கானிப்பு கேமரா பொருத்த படவில்லை என காவல் துறை கூறுகின்றது. கண்கானிப்பு கேமரா பொருத்தாமல் இருந்ததால் பட்ட பகலில் நடந்த இந்த கொல்லை சம்பவத்தில் ஈடு பட்டவர்களை பிடிக்க முடியவில்லை. வங்கியில் திருடு போனதுகப்புறம் இப்பொழுது அங்கே கங்கானிப்பு கேமரா பொருத்துகின்றார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஷ்க்காரம் எதற்கு.

8 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ஒவ்வோறு வங்கியிலும் எரிந்து விழுவதுற்கு என்றே ஒருவர் இருக்கிறார் என்ன செய்ய...

சமூக அக்கறை இல்லாமல் இவர்கள் இருப்பது மிகவும் கவலைஅளிக்க கூடியதுதான்...

நன்பேண்டா...! சொன்னது…

வருகைக்கு நன்றி:கவிதை வீதி... // சௌந்தர் //

bandhu சொன்னது…

என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வாடிக்கையாளர்கள் இல்லையேல் வங்கி இல்லை. இந்த சிறிய உண்மை தெரியாமல் இருக்கும் இந்த ஊழியர்களை என்ன சொல்வது?

Unknown சொன்னது…

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
என்பதை இவர்கள் அறிய மாட்டார்கள்!

தேவையான பதிவு!

புலவர் சா இராமாநுசம்

Prem S சொன்னது…

நீங்கள் சொல்வதில் உடன்பாடில்லை அனைத்து பணியாளர்களும் அப்படி இல்லை

MMMM சொன்னது…

பொதுத்துறை வங்கிகள் மக்களின் வரிப்பணத்தை கடன் என்ற பெயரில் அரசியல்வாதிகளுக்குத் தாரை வார்க்கின்றன! பொதுமக்களோ, மாணவர்களோ போய்க் கேட்டால் கிடைக்கும் 'மரியாதையே' தனிதான்! அலைக் கற்றை ஊழலில் முதலில் உரிமம் பெற்ற லெட்டர் பேட் நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள் (காரணம் அவை அரசியல் பின்னணி உள்ள கம்பெனிகள்!) கடனை திரும்பப் பெற என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன? பணம் ஏப்பம்தானே?

நன்பேண்டா...! சொன்னது…

வருகைக்கு நன்றி: bandhu, புலவர் சா இராமாநுசம், MMMM

நன்பேண்டா...! சொன்னது…

PREM.S சொன்னது…
//நீங்கள் சொல்வதில் உடன்பாடில்லை அனைத்து பணியாளர்களும் அப்படி இல்லை//

நண்பரே மன்னிக்கணும் நான் அனைத்து ஊழியர்களையும் சொல்ல வில்லை. மனிதாபிமானம் இல்லாத ஊழியர்களை பற்றிய எனது அனுபவத்தைதான் கூறியுள்ளேன் நன்றி நண்பரே

கருத்துரையிடுக