கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய்

கலைஞரின் அதிரடி




ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியேறியது என தெரிவித்தார்.மேலும், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கூடவே இருந்து குழிபறிக்கும் வேலையை செய்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். வெளியிலிருந்தும் ஆதரவு கிடையாது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் திமுக மத்திய அமைச்சர்கள் இன்றே பதவி விலகுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஈழப்பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து கூட்டணியிலிருந்து விலகுவதாக அவர் காரணம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையில் உள்ள திமுக அமைச்சர்கள் இன்று அல்லது நாளை ராஜினாமா செய்வார்கள் என்று கூறினார் கருணாநிதி.

மொத்தம் 18 உறுப்பினர்கள் ஐமுகூவில் திமுக சார்பாக இருப்பதால் தற்போதைய விலகல் அந்தக் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் பேசிவருகின்றன.

புதன்

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே..!


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
என்னூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்

கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே...



என்னக்கு பிடித்த கலைஞரின் கவிதை