ஞாயிறு

கடுபேத்துறாங்க மை லார்ட்...!



பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற கைதி இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கருணை காட்டியுள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல். ஏற்கனவே இவங்க நாடு நாடா சுத்துனது விமர்ச்சனத்துக்கு  உள்ளாகி இருக்கும் இந்த நேரத்துல இந்த காமெடி வேற. பேசாம ஆங்கிலேயர் ஏற்படுத்திய இந்த கவுறுவ பதவியையே ரத்து பண்ணினா என்னன்னு தோணுது தோணுது.


======================================



நடக்கறது எல்லாம் பார்க்கும் பொழுது நித்யானந்தாவுக்கு நல்ல காலமா கெட்ட காலமான்னு சந்தேகமா இருக்கு. அவரும் ரொம்ப காலமா சாமியாரா இருக்கார். அப்பொழுதெல்லாம் அவர் இந்த அளவுக்கு மக்கள்  மத்தியில் ரீச் ஆகல. எப்ப ரஞ்சிதா விசயத்துல அவர் பெயர் அடிபட்டுசோ அதிலிருந்து தொடர்ச்சியா மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியா ஆனதாகட்டும் கர்னாடக பத்திரிக்கயாளர்களை தாக்கியது வரைக்கும் அவருக்கு பப்ளிசிட்டி தான். நித்யானந்தா சம்பந்தமாக தினமும் ஒரு செய்தியாவது இடம் பெறாமல் இல்லை. அவரும் கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டவில்லை (மீசையே இல்லைங்குறது வேற விஷயம்) என்பதும் போல சிரிசிகிட்டே பத்திரிக்கைகளுக்கு போஸ் குடுத்துகிட்டு இருக்கார். இந்த நிலைல ஒரு புது சர்ச்சை வேற கிளம்பி இருக்கு. மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தா ஆதரவாளர்களால் நடத்தப்படும் அன்னதானத்தில் சாப்பிட வந்த ஒரு முதியவரை வெள்ளை நிற ஜிப்பா அணிந்த நித்தியானந்தாவின் ஆதரவாளர் ஒருவர் படு கொடூரமாக காலால் எட்டி உதைத்தும், கன்னத்தில் பளார் பளார் என இருமுறை அறைந்தும் மிருகத்தைப் போல நடந்து கொண்டசெயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு. எது எப்படியோ பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சி செய்திகளுக்கும் புது பரபரப்பு செய்தி கிடைச்சிருச்சி.

================================================================


 ஹரினா மாநிலம் மானேசர் அருகில் 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4வயது குழந்தை மஹியை கிட்டத்தட்ட 85 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் இன்று பிற்பகல் ராணுவ மீட்புக் குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்லி இருக்காங்க.  ஆழ்குழாய் கிணறுக்காக போட்ற  துளைகல்ள குழந்தைங்க விழுந்துகிட்டு தான் இருக்காங்கா ராணுவமும் காப்பாத்த போராடிகிட்டு தான் இருக்காங்க இதுக்கு எப்பதான் முடிவு வருமோ தெரியல.

===============================================


ஏறக்குறைய பிரணாப் முகர்ஜி தான் அடுத்த ஜனாதிபதின்னு உறுதி ஆயிடுச்சி. இது எல்லோருக்கும் நல்லாவே தெரியும். அப்படி இருக்கும் பொழுது ஜெயலலிதா போன்றவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு சர்மா ஜனாதிபதி தேத்தலில் தான் அமோக வெற்றி பெருவேன்னு அறிக்கை விட்டுகிட்டு இருக்காரு.இதுக்கு பேருதான் ஆள் இல்லாத கடைல டீ ஆத்தர்தோ . நல்ல வேலை நம்ம மருத்துவர் அய்யா கட்சிக்கு கணிசமான எம்.எல. ஏ வோ எம்.பி யோ இல்லை. இருந்து இருந்தா திருமாவளவன் தான் ஜனாதிபதியா வருனும்னு அறிக்கை விட்டாலும் விட்டிருப்பார். நல்ல வேலை நாடு தப்பிச்சது.

============================================


சனி

கார்த்தியின் சகுனியும் மலையாளிகளின் விமர்சனமும்..!


நான் சினிமா பார்ப்பதை விட்டு ஏறக்குறைய எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. எப்பொழுதாவது ரோபோ தசாவதாரம் போன்ற சில  படங்களை மட்டுமே திரையரங்குக்கு சென்று பார்த்திருக்கின்றேன். அந்தவகையில் நான்  கடைசியாக பார்த்த படம் சங்கரின் நண்பன். அந்த படம்  பார்க்க சென்றது  ஹிந்தியில் அமீர்கான் நடித்த த்ரீ இடியட்ஸ் படத்தின் தழுவல்  என்ற  காரணத்தால் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பிறகு இன்று வரை எந்த படமும் பாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை எனக்குள் ஏற்படுத்த வில்லை. கடந்த வியாழன் அன்று கார்த்தி நடித்த சகுனி வெளியானது. அந்த படத்தை  பார்த்தே தீர வேண்டும் என  என் நண்பனின் வற்புறுத்தலின் காரணமாக  சகுனி  திரைப்படத்தை துபாயில்  நள்ளிரவு 1.30 காட்சி பார்க்க நேர்ந்தது.

படத்தை பற்றி பெரிய எதிர்பார்ப்பு இல்லாத காரணத்தால் இந்த படமும் வழக்கமான தமிழ் சினிமாவாகதான் இருக்கும் என்று என்னதிலையே சென்றிருந்தேன். நான் எதிர் பார்த்தது போலவே படத்தில் எந்த சுவாரச்யமும்  இல்லாமல் வழக்கமான தமிழ் சினிமா பார்முலாபடி 4 பாட்டு, கொஞ்சம்  காமெடின்ர பேர்ல மொக்க, வழக்கமாக பாடலுக்கு மட்டும் மார்பையும்  வயித்தையும் தொடையும் காட்டி ஆடிசெல்லும் கதாநாயகி காது  கிழியும்  அளவுக்கு கத்தும் வில்லன் அப்படின்ற  வழக்கமான  தமிழ் சினிமாதான் சகுனி. தமிழ் சினிமாவின் தரம் குறைந்து விட்டதா அல்லது சினிமா குறித்த என் பார்வை மாறி விட்டதானு எனக்கு நானே கேள்வி கேட்டுபது உண்டு.
அது பற்றி தனி பதிவே போடலாம். நான் சொல்ல வந்தது  அது பற்றியல்ல.  தமிழ் சினிமாவில் மலையாளிகளின்  ஈர்ப்பு குறித்து என் பார்வையை பகிர்ந்து  கொள்ள விரும்புகின்றேன்.


துபாயில் நான் தங்கி இருப்பதுக்கு அருகில்தான் திரை அரங்கு இருக்கிறது. அங்கு  எந்த அளவுக்கு தமிழ் சினிமா வெளியிடுகின்றார்களோ அதே  அளவுக்கு மலையாள படமும் வெளியிடுவார்கள். அப்பொழுதெல்லாம் திரையரங்கில்  இருக்கும் மக்களை கவனித்து இருகின்றேன். மலையாள  படத்துக்கு பெரிதாக  கூட்டம் இருக்காது. அதே நேரத்தில் தமிழ் சினிமா விற்கு தமிழ் மக்களை விட  மலையாளிகளின் கூட்டமே அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் மலையாள  படத்திற்கும் எந்த ஒரு தமிழ் மக்களும் சென்று  இதுவரை நான் பார்த்தது இல்லை. இதை நான் வெளிபடையாக ரஜினியின் ரோபோ ரிலீஸ் ஆனா  பொழுது திரையரங்கம் மலையாளிகளால் நிறைந்து  வழிவதைபார்த்து  வியபடைந்துள்ளேன். அதேபோல் விஜயின் நண்பன்  படத்துக்கும்  மலையாளிகள் டிக்கெட்டுக்கு அடித்துகொன்டதை பார்த்து  இருகின்றேன். ரஜினி விஜய் போன்றவர்கள் தமிழகத்தின் மாஸ் ஹீரோக்கள்  அவர்கள். படத்தை  மொழிகளைகடந்து மலையாளிகள் ரசிக்க வாய்ப்புள்ளது. ஆனால் கார்த்தி  போன்ற புதியவர்களின் படத்துக்கும் அதே அளவு மலை யாளிகளின் கூட்டம் வருவதை பார்க்கும் பொழுது ஆச்சர்யம்மகதான் உள்ளது.


சகுனி படம் முடிந்து வெளிவரும்போது மலையாளிகள் அவர்களுக்கு இடையில் "ஈ ஆளுக்கு எந்த பேக்ரவுண்டும் இல்ல பின்ன எங்கன ஈ ஆளு ஒரு ஸ்டேட் சி எம் சேன்ஞ் ஆக்கும் லோஜிக் கரக்டாயிட்டு இல்ல" இப்படி  பேசிக் கொண்டு போனதை காண முடிந்தது . மொழியை கடந்து சினிமாவை  ரசிக்க  வந்த இவர்களின் இந்த ஒரு வரி விமர்சனம் போதும்  இந்த படத்தை  பற்றி  நாம் ஒரு  முடிவிற்கு  வர நான் சொல்வது சரிதானே.