வியாழன்

வாழ்ந்து கெட்ட மாமேதை..!

ராமராஜன் இந்த பெயர் இன்று அனைவருக்கும் ஒரு கேலிக்குரிய பெயராகிவிட்டது. ஆனால் இரு இருபத்தி மூன்று வருடம் பின்னோக்கி சென்றோம் என்றால் அனைத்து தயாரிப்பாளர்களின் மந்திர சொல் ராமராஜன்.

ஒரு சின்ன கொசுவத்தி:
16 - ஜூன் 1989 வருடம் கரகாட்டக்காரன் என்ற படம் ரிலீசானது.  இந்த படத்தை  G B கம்பைன்ஸ் வெளியிட்டது.   இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்த இயக்கினது இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இந்த படம் இந்த அளவுக்கு வெற்றி பெரும்ன்னு நானே எதிர்பார்க்கலன்னு ஒரு நேர்காநல்ல  கங்கை அமரனே சொன்னார் அந்த அளவுக்கு அந்த படம் சூப்பர் ஹிட். இந்த படத்தின் தயாரிப்பலார்கள் திரு. கருமாரி கந்தசாமி  மற்றும் ஜெ.துரை அவர்கள். இந்த படம் தொடர்ச்சியாக இறைண்டரை வருடம் ஓடியதாக நினைவு.   

எப்படியாவது ராமராஜனை வைத்து ஒருபடமாவது இயக்கிவிட வேண்டும் என்று  அனைத்து இயக்குனகளும்  ஏங்கிய காலம் அது. எங்கள் ஊர் பகுதிகளில்  கரகாட்டகாரன் பார்க்க மக்கள் வண்டி கட்டி கொண்டு  டூரிங் டாகீச்க்கு  சோத்து மூட்டையுடன் சென்றது 'நல்ல தங்கள்' என்ற  அப்புறம் அது கரகாட்டக்காரனுக்கு  மட்டுமே. அதன் பிறகு பல நல்ல படம் என்று சொல்லிக்கொள்ளும்  அளவுக்கு படங்கள் வந்தாலும் கரகாட்டக்காரன்  அளவுக்கு  கிராமங்களில்  தாக்கத்தை  ஏற்படுத்தவில்லை.  

ராமராஜன் சினிமாத்துறையில் உச்சாணி கொம்பில் இருந்தகாலம் அது. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பழமொழிக்கு ஏற்ப காலம் மாறியது. கால ஓட்டத்தில் பல புதிய நடிகர்கள் வர தொடங்கினார்கள். மக்களின் ரசனையும் மாறியது ஆனால் ராமராஜனுக்கு மக்களின் ரசனைக்கு தகுந்தவாறு தன்னை புதுபித்துகொள்ள   தெரியவில்லை. 

பிரபு, சத்யா ராஜ், பாண்டியராஜ் போன்ற நடிகர்கள் தங்களுக்கு எது ஒத்து வருமோ அது போன்ற பாத்திரங்களை தேர்ந்தெடுக்க தொடங்கினார்கள். உதாரணமாக இரண்டாவது  ஹீரோ பாத்திரம் 
ஆனால் நம்ம ராமராஜ் சார் மட்டும் நடித்தால் ஹீரோ அதுவும். எம்.ஜி. ஆர். அதிகம்  நடித்த ஏழை மக்களுக்கு   உதவுவது. பெண்களை தானாக தேடி செல்லாமல் பெண்கள் கதாநாயகனை தேடிவரவேண்டும். போன்ற  கதை அமைப்புள்ள பாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்ததும் தான் இன்று சீறிவரும் காளை, மேதை  போன்ற படங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலை எற்ப்படக்காரணம்.

பின்னர் அவர் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கினார் அ தி மு க சார்பில் பனிரெண்டாவது லோக்சபா  தேர்தலில்  திருசெந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.  சரி ராமராஜனின்  பாதை மாறிவிட்டது என்று பார்த்தல் பதிமூணு மாதம்தான்  அந்த வாழ்க்கை.  புரச்சி தலைவியின்  ஆசியால் ஆரம்பித்த இடத்திற்கே மறுபடியும்  வரவேண்டிய நிலை.  

சரி அரசியல் பொழப்புதான் நாசமா போய்டுச்சி நடிப்பு தொழிலையாவது கவனிக்கலாம்  என்றால் 'முத்தின கத்தரிக்காய்' மார்கெட்டில் விலை போகவில்லை. அப்பொழுதான்  எல்லா நடிகர்களும் செய்யும் ஒரு முட்டாள் தனமான காரியத்தை செய்தார். அதுதான்  சொந்த படம் எடுப்பது அதிலும் மரண அடி. அதன் மூலம் கடன் தொல்லை  குடும்ப பிரச்னை என்று அவர் வாழ்கையில் சூறாவளி அல்ல சுனாமியே வீச  ஆரம்பித்தது.
என்ன லுக்குடா..! இதுக்கு பேர்தான் ராஜபார்வையோ  

இப்படி பல பிரச்சினைகளை சந்தித்து விடா முயற்சியின் காரணமாக இரண்டாவது ரவுண்டுக்கு  மேதை  தயாராகி விட்டார்.  எங்க மக்கள் நாயகன் யானையல்ல விழுந்தால் ஏல முடியாமல்  போக. அவர் ஒரு அரேபிய குதிரை எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து மறுபடியும் விழுந்து மறுபடியும்  எழுந்து மறுபடியும் விழுந்துன்னு உங்கள் மனதை உறுதிபடுத்த  மேதை போன்ற படங்களை தொடர்ந்து கொடுத்து கொண்டே இருப்பார் என்று தெருவித்து கொள்கின்றோம் 

               
 


2 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

//உங்கள் மனதை உறுதிபடுத்த மேதை போன்ற படங்களை தொடர்ந்து கொடுத்து கொண்டே இருப்பார் என்று தெருவித்து கொள்கின்றோம்
//

why this kolaveri ....?

பொ.முருகன் சொன்னது…

இதே 'மேதை'ப் படம் 90 களில் வந்திருந்தால் விமர்ச்சனமே வேறுமாதிரி இருந்திருக்கும்,ரிசல்ட்டும் நல்லமாதிரி வந்திருக்கும்.என்ன செய்ய காலம் மாறிப்போனது ராமராஜனுக்கு தெரியவில்லையே.

கருத்துரையிடுக