செவ்வாய்

யார் இந்த இந்து முன்னனியினர் மற்றும் காங்கிரஸ் காரர்கள்..!



இந்தியா போன்ற நாடுகளுக்கு அனு உலை தேவையா என்பதை ஏற்கனவே நாம் விரிவாக பார்த்துள்ளோம். அதை படிக்க இங்கே சொடுக்கவும். இந்த நிலையில் அனு உலை எதிர்ப்பு குழுவின் பிரதினிதிகள் நெல்லை ஆட்சியர்  அலுவலகத்திற்கு பேச்சுவார்தைக்கு வந்துள்ளனர். அவர்களை இந்து முன்னனியினர் மற்றும் காங்ரஸ் காரர்களும் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செருப்பால் அடித்துள்ளனர்.


அணு உலை எதிர்ப்பு குழுவின் போராட்டம் சரியா தவறா என்ற விவாதம் நமக்கு தேவையில்லை. ஆனால் ஒரு ஜன நாயக நாட்டில் அரசின் எந்த ஒரு நடவடிக்கை மற்றும் திட்டங்கள் குறித்து மாற்று கருத்து அல்லது அந்த திட்டம் தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்ற அச்சம் இருகுமேயானால், அவர்களுக்கு போராட்டம் நடத்த எல்லா வித உரிமையும் இருப்பதாக அரசியல் சாசானம் கூறுகின்றது. அப்படி இருக்கும் பொழுது மக்களுக்கு இருக்கும் அச்சத்தை போக்க வேண்டியது அரசின் கடமை. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதை தான் இந்த பேச்சுவார்த்தை உனர்த்துகின்றது. எனவே அரசின் நடவடிக்கை பாராட்ட தக்கதுதான்.



ஆனால் போராட்டம் நடத்தும் ஒரு பிரிவினரை அந்த போராட்டதில் உடன்பாடு இல்லாத மற்றொரு பிரிவிவனர் தாக்குவது என்பது ஒரு தவறான முன்னுதாறனமாக அமைவதற்கு முன்னால் அந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமாகதான் பின் வரும் காலங்களில் இது போன்ற வன்முறை நடக்காமல் தடுக்க முடியும். எனவே காவல் துறையினர் எந்த தயக்கமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இந்த இந்து முன்னனியினர் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு போராட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்த என்ன உரிமை இருகின்றது. ஜனனாயக வழியில் போராடுவது அவர்களின் உரிமை அதை தடுக்க யாருக்கு அதிகாரம் இல்லை. இந்த காங்ரஸ் காரர்களின் மன நிலை என்ன மத்தியில் காங்ரஸ் ஆட்சி செய்தால் அவர்களின் திட்டங்களை யாரும் எதிர்த்து வாய் திரக்க கூடாது என்று நினைகின்றனரா? இது என்ன ஜனனாயகம். அவர்களை ஓட்டு போட்டு அதிகாரத்தில் அமர வைத்தது இந்த மக்கள்தான் அதை மறந்து விட வேண்டாம். நாளை ஓட்டுக்காக கூழக்கும்புடு போட்டுக்கொண்டு இந்த மக்கள் முன்புதான் வந்து நிற்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

1 கருத்து:

கூடல் பாலா சொன்னது…

நடுநிலையான பதிவு !

கருத்துரையிடுக