வியாழன்

சவால் விடும் சாலை போக்குவரத்து!

இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டில் பெருகிவரும் போக்குவரத்து நெரிச்சல் நமது அரசுக்கும் மக்களுக்கும் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்து உள்ளது.

இதற்கு இரண்டு கரணம் இருபதாக எனக்கு தோன்றுகிறது, ஒன்று அரசுக்கு தொலை நோக்கு பார்வை இல்லாதது. மற்றொன்று பொது நலனில் அக்கறை இல்லாத மக்கள்.

முதலில் தொலை நோக்கு இல்லாத அரசின் செயல்பாடுகளை பார்போம்.

இன்றைய நவீன உலகில் சாலை போக்குவரத்து என்பது மிகையும் இன்றியமையாதது, எனவே இன்றைய நிலையில் சாலை போக்குவரத்தின் அவசியம் உணர்ந்து அரசு எந்திரம் செயல்படுவது அவசியம்.
அரசின் தாரலமயமகளின் காரணமாக பல தானியர்கள் வாகன உற்பத்தியில் ஈடுபட்டத்தின் காரணமாக வாகன பெருக்கம் நாளுக்கு நாள் பெரிகிகொண்டே வருவதை நாம் கண்கூடாக பார்த்துகொண்டு இருக்கின்றோம், வாகன உற்பத்தி வளர்சிக்கு இணையாக சாலை வசதி ஏற்படுத்துவது அரசின் இன்றியமையாத கடமையாகும்.
அரசின் சாலை விரிவாக்க பனியின் வேகம் இன்னும் அதிகரித்தால் தான் வளர்ந்து வரும் வாகன பெருக்கத்தை சமாளிக்க முடியும்.
இருசக்கர வாகனபெருக்கம் அரசுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில் நானோ டெக்னாலஜி எனும் புதிய நான்கு சக்கர வாகன உற்பத்திக்கு அரசின் கடன் மற்றும் வரி சலுகை அளித்திருப்பது போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகமாக வைப்பு இருக்கிறது. இந்த நிலையில் அரசின் சாலை மேம்பட்டு வசதிகள் போதுமானதாக இல்லை. இந்த புதியவகை கார்கள் சாலையில் ஓட துவங்கினால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் சென்னை போன்ற நகரத்தில் வாகனம் ஊர்ந்து செல்லகூட முடியாத நிலை ஏற்படும்.

மேலும் பெருகி வரும் வாகன பெருகதிற்கு ஏற்றார்போல் நகரத்தில் பார்கிங் வசதி செய்யப்படவில்லை என்பது கவனிகதக்கது. அத்துடன் பாதசாரிகள் நடந்து செல்ல போதுமான வகையில் சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்க பட வில்லை என்பதும் கவனிக்க தக்கது. நடைபாதை அமைக்க பட்ட சில இடங்களிலும் நடைபாதை வியாபாரிகள் காரணமாக நடை பயணிகள் சாலையில் நடக்க வேண்டிய சூழ்நிலையில் தான் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

எனவே பெருகிவரும் வாகன பெருக்கத்தை கட்டு படுத்த அரசு பொது போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும். அப்பொழுது மக்கள் ஒவொருவரும் தனியாக வாகனம் பயன்படுத்துவதை தானாக குறைத்து கொள்ளும் நிலை ஏற்படும். மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுமானால் பொது போக்குவரத்தின் தரம் உயர்தபடவேண்டியது அவசியமாகும். அவ்வாறு மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் சாலை நெருக்கடி மற்றும் சுற்றுசூழலும் பாதுகாக்க படும் என்பதில் மாற்று கருது இருக்க முடியாது. மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வைப்பது என்பது ஒரு தற்கால தீர்வு மட்டுமே, சாலை விரிவாக்க பணியால் மட்டுமே போக்குவரத்தை கட்டுபடுத்த முடியும் இதை அரசு உணர்ந்து நடவடிக்கை எடுத்தால் தான் போக்குவரத்தை கட்டுபடுதமுடியும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

டாப் ஸ்லிப் TO பரம்பிக் குளம்

WDதமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் இயற்கையின் அரணாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில்தான் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கொடைக்கானல் ஆகிய கோடை சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றோடு ஒப்பிடுகையில் உயரம் குறைவாக இருப்பினும் அழியாத இயற்கை எழிலுடன் திகழ்கிறது டாப் ஸ்லிப்.தமிழ்நாட்டின் பசுமை மாவட்டமான கோவையில் தென்னஞ் சோலைகளுக்கு இடையே செல்லும் பாதையில் 30 கி.மீ. பயணித்து டாப் ஸ்லிப் மலை வனப் பகுதியின் அடிவாரத்தை அடையலாம். அங்குள்ள சோதனைச் சாவடியில் முழுமையான சோதனைக்குப் (குடிமக்கள் கவனிக்க) பின் மலைப் பாதையில் மேலேறத் துவங்கியதுமே பல வன விலங்குகளைக் காணலாம்.சிங்க வால் குரங்கு, காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி ஆகியன பாதைக்கு அருகிலேயே திரிவதைக் காணலாம்.
மலபார் அணில் என்றழைக்கப்படும் பெரிய வகை அணில் - இவர் ஒரு மரத்திலிருந்து சில மீட்டர் தூரத்திலுள்ள இன்னொரு மரத்திற்குத் தாவுவதை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். பொதுவாக மரக்கிளையில் வசதியாக படுத்து ஒய்வெடுக்கும் நிலையிலேயே இவரைக் காண முடியும்.வாகனத்தை மிக மெதுவாக ஓட்டிச் செல்லுங்கள். நமது ந(ர)கர வாழ்க்கையில் சிட்டுக் குருவியைக் கூட தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டிருக்கும் நமக்கு, வண்ண வண்ணமாய் பறந்து திரியும் பலவகைப் பறவைகள் (ஒன்றின் பெயரும் நமக்கு தெரியவில்லை) தரிசனம் தருவார்கள். வழிகாட்டுவதைப் போல நமக்கு முன்னே பறந்த செல்லும் குருவியைப் போன்ற பறவையின் வேகம் பிரமிப்பைத் தரும்.ஒரு மணி நேர மலைப் பயணத்திற்குப் பிறகு (மீ்ண்டும் ஒரு சோதனை சாவடி, சோதனையைத் தாண்டி) டாப் ஸ்லிப்பைத் தொடுவோம். நம் கண் முன்னே விரியும் பரந்த பசுமைப் புல்வெளி. அந்தி சாயும் நேரத்தில் இங்கு கூட்டம் கூட்டமாக மான்களைக் காணலாம்.கடந்த 5 ஆண்டுகளில் டாப் ஸ்லிப் வனப் பகுதி மிகவும் கவனமாக பராமரிக்கப்பட்டு செழிப்புடன் உள்ளது. ஞெகிழி (பிளாஸ்டிக்), ஸ்டீரியோ இசை ஆகியவற்றிற்குத் தடை செய்து விலங்கினங்களின் நலன் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. பரந்த புல்வெளியுடன் துவங்கும் இந்த வனப் பகுதி இந்திரா காந்தி தேச உயிரி பரவல் பூங்காவின் (National Bio-diversity Park) ஒரு அங்கமாக உள்ளது.

WDஇங்கிருந்து 5 கி.மீ. தூரம் வரை தமிழ்நாட்டின் எல்லைக்குட்பட்ட வனப் பகுதியாகும். இந்த நீண்ட சாலையில் காலைப் பொழுதிலோ அல்லது மாலை 4 மணிக்குப் பிறகோ அமைதியாக நடந்த சென்றால் பல விலங்குகளைக் காணலாம். எக்காரணத்திற்காகவும் பாதையில் இருந்து இறங்கி வனப் பகுதிக்குள் செல்லாதீர்கள். சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் இங்கு மிக அதிகம். டாப் ஸ்லிப் பகுதியில் நுழைந்ததுமே அங்கு வன அலுவலகம் உள்ளது. இந்த வனப் பகுதியிலேயே இரவு (கொஞ்சம் துணிச்சல் அவசியம்) தங்கலாம். அதற்கான பாதுகாப்பான குடில்கள் உள்ளன. டாப் ஸ்லிப்பிற்கு வரும் வழியில் - ஜமீன் ஊத்துக்குளி என்ற இடத்தில் உள்ள வன அலுவலகத்திலும் இங்கு தங்குவதற்கான குடிலை பதிவு செய்துக் கொள்ளலாம்.இரண்டு, மூன்று கி.மீ. தூரத்தில் சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் குடில்களில்
தங்கினால், மாலை 7 மணி முதல் பல விலங்குகள் சுதந்திரமாக உலவுவதைக் காணலாம். வனத் துறையினர் பயன்படுத்தும் சக்தி வாய்ந்த விளக்குகள் (Focus Lights) இருந்தால் தூரத்தில் உலவும் விலங்குகளைக் காணலாம். இரவு நேரத்தில் வெளியில் இருந்து விலங்குகளை தரிசிக்க முயற்சிப்பை ஆபத்தான சிக்கலாகிவிடும், எச்சரிக்கை.தமிழக வனத்துறையினர் இங்கு உருவாக்கி பராமரித்துவரும் மூலிகைப் பண்ணையை மறக்காமல் சென்று பாருங்கள்.பரம்பிக் குளம் நோக்கி! டாப் ஸ்லிப்பில் துவங்கும் இந்த வனப்பகுதியின் பெரும் பகுதி கேரளத்தின் எல்லைக்குட்பட்டதாக உள்ளது. 5 கி.மீ. தூர சாலைப் பயணத்திற்குப் பின், கேரள எல்லையில் அமைந்துள்ள வன - சுற்றுலா அலுவலகத்தை அடையலாம்.

WDஇங்கிருந்து 30 கி.மீ தூரம் பயணம் செய்து வனத்தின் மையத்திலுள்ள பரம்புக் குளம் அணைக்கட்டை அடையலாம். இடைப்பட்ட பயண தூரம் முழுவதும் வனம்தான்!நீங்கள் உங்களது சொந்த அல்லது வாடகை வாகனத்துடன் சென்றாலும், கேரள வனப் பகுதிக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. எல்லையில் உள்ள வன அலுவலகத்தில் இருந்து இதற்கென்று சேவையில் உள்ள பேருந்துகளில்தான் உள்ளே செல்ல முடியும். இதற்கு ஒருவருக்கு ரூ.30.00 கட்டணம் வசூலிக்கிறது கேரள வனத்துறை. அந்த சிற்றுந்தில் 12 பேர் வரை பயணிக்கலாம். பேருந்தில் வரும் வழிகாட்டி வனத்தில் தென்படும் விலங்குகளை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு விளக்குகிறார். சத்தம் எழுப்பாமல் (விலங்குகளை தொந்தரவு செய்யாமல்) பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறார்.கேரள எல்லையில் இருந்து பரம்பிக் குளம் செல்லும் 30 கி.மீ. தூரப் பாதையும் அடர்ந்த வனப் பகுதியாகும். இந்த வனப் பகுதியில்தான் வீணாக கடலில் சென்று கலக்கும் தண்ணீரை அணைகள் கட்டி
தமிழ்நாட்டிற்கு திருப்பி, அதனை விவசாயத்திற்கும் மின்சார தயாரிப்பிற்கும் பயன்படுத்துகிறது தமிழ்நாடு. இதற்காக கட்டப்பட்டுள்ள அணைகளே பெருவாரிப் பள்ளம், துணக்கடவு, பரம்புக் குளம் அணை ஆகியன.பரம்பிக் குளம் அணையினால் தேங்கும் தண்ணீர் சுரங்கத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள காடம்பாறை நீரேற்று மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. கீழ்பவானி, மேல்பவானி உள்ளிட்ட குந்தா நீர் மின் திட்டத்திற்குப் பிறகு பல அணைகளை கட்டி நீரை திருப்பி மின் தயாரிக்கும் திட்டமே பரம்பிக் குளம் - ஆழியாறு - பாண்டிப் புழா நீர் மின் திட்டமாகும்.பரம்பிக் குளத்திற்குச் செல்லும் வழியில் வனத்திற்கு உள்ளே உள்ள ஒரு மிகப் பழமை வாய்ந்த தேக்கு மரம் ஒன்று உள்ளது.
மிக உயரமான, மிகவும் பருத்த தேக்கு மரம் இதுவென்று அறியப்படுகிறது. இதனை வெட்ட முயன்றபோது இதிலிருந்த இரத்தம் வடிந்ததால் அதனை அப்படியே விட்டுவிட்டதாகவும், அன்றிலிருந்து அம்மரம் கன்னி மரம் (மலையாளத்தில் கன்னிமாரா) என்று அழைக்கின்றனர். ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இயற்கை அதிசயம் இது. கேரளத்தின் வனப் பகுதிக்கும் சென்று தங்கும் வசதி உள்ளது. இரு வனப் பகுதிகளிலும் வனத்திற்குள் சென்று வர யானை சவாரி வசதி உள்ளது.டாப் ஸ்லிப் வனப் பகுதியில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய யானை வளர்ப்பு மையங்களில் ஒன்று உள்ளது. இங்கு 19 யானைகள் வளர்க்கப்படுகின்றன. உபயம்: http://tamil.webdunia.com/entertainment/tourism/wildlife/0906/01/1090601086_1.htm

புதன்

ஐயோ (IPL) கிரிக்கெட் கூத்து...!!!!

சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி பெற்ற செய்தி அனைவருக்கும் சந்தோசம்! அனால் அந்த இறுதி போட்டியில் எப்படி சென்னை வெற்றி பெற்றது என்று அனைவர்க்கும் வியப்பாக இருக்கலாம் ஆச்சர்யமாக இருக்கலாம் என்னையும் சேர்த்து.

நன்றாக விளையாடி கொண்டு இருந்த மும்பை அணி ஏன் திடீர் என்று ஹர்பஜன் சிங்கை களம் இறக்க வேண்டும் பின்பு வந்த வீரர்கள் வரிசையாக வந்த வேகத்தில் மைதானத்தை விட்டு அவுட் ஆகி வெளியேற வேண்டிய அவசியம் என்ன உண்டானது.

இதில் எதோ மர்மம் இருபதாக எனக்கு தோன்றுகிறது, இதில் ஒன்றும் மர்மம் இல்லை எல்லாம் முன்குட்டியே தீர்மானிக்க பட்டதை போல தோன்றுகிறது. கிரிக்கெட் ரசிகர்களே யோசிங்க இனிமேலாவது கிரிக்கெட்டுக்க நேரத்தை வீணாக்காமல் உழைக்க தொடங்குக உழைப்பு ஒன்றுதான் உங்களையும் உங்கள் நாட்டையும் முன்னேற்ற பயன்படும்.

வியாழன்

அருமந்தமான அருகம்புல்


“ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க” இன்றும் கூட சில திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள்.ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள் சொல்லிவந்தனர்.அருகம்புல்லை சித்தர்கள் ஆரோக்கியப் புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர்




1.Tamil - arukampul


2.English - Bermuda grass,


3.Telugu - Garika gaddi,


4.Malayalam - Karuda pullu,


5.Sanskrit - Doorwa,


6.Botanical Name - Cynodon dactylon


அருகு, பதம், மூதண்டம், தூர்வை, மேகாரி என்று வேறு பெயர்களிலும் இது அழைக்கப் படுகிறது.அருகில் நான்கு வகைகள் உள்ளன.




1) யானை அருகன், 2) சிறு அருகன், 3) பெரு அருகன், 4) புல் அருகன்.




யானை அருகன்


யானை அருகனில் தண்டு பெரியதாக இலை நீண்டு தண்டு மூட்டுக்கள் நீளமாகவும், உயரமாகவும் இருக்கும். மழைக்காலங்களில் செழிப்பாக வளரும்.இந்த யானை அருகனை சித்தர்கள், ஞானிகள், அறிவு சார்ந்த மருத்துவர்கள் பயன்படுத்தினார்கள். இது மற்ற மருந்துகளுடன் துணை மருந்தாக பயன்படுகின்றது.


புல் அருகன்

விநாயகருக்கு அணிவிக்கும் மாலை புல் அருகன் ஆகும். இவை எல்லா இடங்களிலும் பரந்து காணப்படும்


சிறு அருகன், பெரு அருகன்

இவை இரண்டுக்கும் தோற்றத்தில் சிறிய வித்தியாசம் உண்டு. ஆனால் இவற்றின் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.அருகின் மருத்துவப் பயன்கள் அனைத்து உயிரினங்களுக்கும் தெரியும். உதாரணமாக நாய்க்கு நோய்வந்தால் அது அருகம்புல்லை உண்ணும். அதுபோல் பாம்பினால் கடிபட்ட கீரி அதன் விஷத்தை நீக்க அருகின் மேல் புரளும்.

அருகம்புல்லின் சமூலத்தை (இலை,வேர், தண்டு) எடுத்து சுத்தம் செய்து சாறு எடுத்து பாத்திரத்தில் உறையவைத்தால் மாவு போன்று வெண்மையாக உறையும். இந்த மாவுப்பொருள் பாலைவிட வெண்மையாகக் காணப்படும்


நரம்புத் தளர்ச்சி நீங்க

அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாறு எடுத்து தினமும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.


கண் நோய் அகல

கண் பார்வை தெளிவடையவும், கண்ணின் சிவப்புத் தன்மை மாறவும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகும்.


குழந்தைகளுக்கு

பொதுவாக அருகம்புல் அசுத்தமான பகுதிகளில் வளராது. இதனை சித்தர்கள் விஷ்ணு மூலி என்று அழைக்கின்றனர். சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற இந்த அருகின் மருத்துவக் குணங்களை அகத்தியர் பாலவாகடத்திலும், வர்ம நூல்களிலும் தெளிவாக விளக்கியுள்ளார். குழந்தைகளுக்குக் கொடுக்கும் மருந்தாக உள்ளதால் இதை குருமருந்து என்றும் கூறுகின்றனர். ஞாபக மறதியைப் போக்கினால் மனிதனின் அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். ஞாபக சத்தியைத் தூண்ட அருகு சிறந்த மருந்தாகும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.


* மலச்சிக்கலைப் போக்கும்·

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

* மெலிந்த உடல் தேறவும், புத்துணர்வு பெறவும் இது சிறந்த மருந்தாகும்.

* அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொரி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.

* நீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்தும்.

* அருகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

நோய்கள் அனைத்தையும் அழிக்கும் குணமுள்ளதால் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் இது முதலிடம் வகிக்கிறது.

கொல்லிமலை ரகசியம்


மலைகளில்தான் மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட மலைகளில் சீரான தட்ப வெப்பத்துடன் அதிக மூலிகைகளைத் தன்னகத்தே கொண்ட மலைதான் கொல்லிமலை. இதனை நில ஆவாரை, நாட்டு நிலாவரை, ஆலகாலம், கமதாயம், தாளினி, ஆவரை, ஆவாகை, குயத்தினலகை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.


இந்தியா முழுவதும் காணப்படும் நிலவாகை தென்னிந்தியாவில் திருநெல்வேலி மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலவாகையானது இந்தியாவின் மூலிகை ஏற்றுமதியில் கணிசமான பங்கு வகிக்கிறது.இதனுடைய இலை அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.


மலச்சிக்கல்

தீரமலச்சிக்கலும், மனச் சிக்கலும் ஆதிநோய்கள் என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறோம். பொதுவாக மலச்சிக்கல் இருந்தால் மனச்சிக்கல் வரும். மனச் சிக்கல் இருந்தால் மலச்சிக்கல் கூடவே வரும். இப்படி மனச்சிக்கலும், மலச்சிக்கலும்தான் நோய்களின் வாசலாக உள்ளன. மலச்சிக்கலைத் தீர்ப்பது மிக அவசியம். நிலவாகை இலையை எடுத்து நிழலில் உலர்த்தி காயவைத்து பொடிசெய்து இரவு உணவுக்குப்பின் வெந்நீரிலோ, பாலிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் மலத்தை இளக்கி வெளியே தள்ளும். நாள்பட்ட மலத்தையும் வெளியேற்றும்.


குடல் சுத்தமாக

நாம் உண்ணும் உணவில் சில கிருமிகள் உட்சென்று குடல் பகுதியில் தங்கிவிடுகின்றன. இதனால் குடலில் உட்பகுதிகளில் உள்ள குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடல் புண்களை ஏற்படுத்துகின்றது. இதனால் சீரண சக்தி குறைந்து உடல் வலுவிழக்கின்றது. இக்குறையை போக்க நிலவாகையிலையை காயவைத்து பொடி செய்து அதில் தேன் கலந்து காலையும், இரவும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் குடல் சுத்தமாகும். மேலும் குடல் பூச்சிகளை நீக்கி குடல் சுவர்களை பலப்படுத்தி சீரண சக்தியைத் தூண்டும்.

கண் பார்வைக் கோளாறு நீங்க

பித்த அதிகரிப்பினால் சிலருக்கு கண் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது. இந்தக் குறையைப் போக்க நிலவாகை இலையை நீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மேக நோய்கள் குணமாக

மேக நோயானது மனித இனத்தையே ஆட்டிப் படைக்கின்றது. இந்த நோயின் தாக்குதலிலிருந்து விடுபட நிலவாகை கஷாயம் பயன்படுகிறது.


வாயுத் தொல்லைகள் நீங்க

நிலவாகையின் வேருடன் பிரப்பங்கிழங்கு, மிளகு, சுக்கு, காரையிலை இவற்றைச் சேர்த்து அரைத்துக் கொடுத்தால் வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சொறி சிரங்கு மாற

உடலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் தோலின் வழியாகத்தான் தெரியவரும். இதனால் தோல் அலர்ஜி ஏற்பட்டு, சொறி, சிரங்கு ஏற்படுகிறது. இதற்கு நிலவாகை இலையை எடுத்து அரைத்து சொறி, சிரங்கின் மீது தடவினால் சிரங்கு விரைவில் குணமாகும்.

அஜீரணக் கோளாறு நீங்க

நிலவாகை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். நீர்ப்பெருக்கியாகவும் நிலவாகை பயன் படுகின்றது.