ஞாயிறு

கூடான்குளமும் அமெரிக்க பணமும்..!






கூடாங்குளம் அனு மின் நிலயத்தை எதிர்த்து போராடும் மக்களுக்கு தலைமை தாங்கும் உதயகுமார் என்பவருக்கு அமேரிக்காவில் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் செயல் படும் சில அமைப்புகள் மூலமாக பணம் வருகிரது என்று கூறி இருப்பது யாரோ சாமானியனின் கூற்று அல்ல இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தான் பத்திரிக்கையாளர்களுக்கு முன் மேற்க்கண்டவாறு கூறியுள்ளார்.

தங்கள் போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக பிரதமர் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகவும் அதை பிரதமர் அவர்கள் நிருபிக்க வேண்டும். என்றும் அவ்வாறு நிருபிக்க வில்லையெனில் பிரதமர் மற்றும் அமைச்சர் நாராயன சாமி மீதும் வழக்கு போடுவேன் என்றும் உதயகுமார் கூரியுள்ளார்.இந்த நிலையில் ரஷ்ய தூதர் தாங்கள் நினைத்தது போல இந்த போராட்டதிற்கு பின்னால் அமேரிக்கவின் கை உள்ளது என்பது இந்திய பிரதமரின் அரிக்கை மூலம் நிருபனமாகியுள்ளது என கூரியுள்ளார்.

இந்த விசயத்தில் நாம் ஒன்றை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. அமேரிக்காவில் இருந்து பனம் வந்துள்ளது என கூறுவது யாரோ ஒரு சாமனியனோ அல்லது தினமலர் போன்ற கூலிக்கு மாரடிக்கும் பத்திரிக்கையோ அல்ல இந்தியாவின் பிரதமர்.இந்தியாவின் அனைத்து அதிகாரங்களும் படைத்தை பாரத பிரதமர். இந்தியாவில் அரசுக்கு எதிராக போராடும் சிலருக்கு அமேரிக்காவில் இருந்து பனம் வருகின்றது என்பதை தெரிந்து இருக்கும் பொழுது அதற்கான அனைத்து ஆதாரங்களையும் ஒன்று திரட்டி உதயகுமாரை கைத்து செய்து நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்பித்து அவருக்கு தண்டனை வாங்கி தருவது ஒரு நாட்டின் அரசுக்கும் அந்த அரசை வழி நடத்தும் பிரதமருக்கும் பெரிய விசயமல்ல அதை விடுத்து ஒரு சிறு பிள்ளை செய்வது போல அறிக்கை விட்டுக் கொண்டு இருப்பதை பார்க்கும் பொழுது பிரதமர் சுய நினைவோடுதான் இருக்கின்றாரா என்ற என்னம் எழுகின்றது.


கூடங்குளத்தில் போராட்டம் நடத்துபவர்கள் அந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பனம் கொடுப்பதாக ஒரு செய்தி உலவிகொண்டு உள்ளது. அதே நேரத்தில் கூட்டம் கூட்ட வேண்டுமென்றால் பனம் கொடுத்து கூட்டத்தை கூட்டுவது சாத்தியம். ஆனால் ஒரு நாட்டின் அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு மக்களை பனம் கொடுத்து கூட்டுவது என்பது இயலாத காரியம். மக்களுக்கு உன்மையில் அரசின் நடவடிக்கை பிடிக்காத பிடிக்காத நிலை இருந்தால் தான் பின் விளைவுகளை பற்றி கவலை படாமல் போராட முன்வருவார்கள்.ஒரு நாட்டின் அரசை எதிர்த்து போராடினால் என்ன என்ன பின்விளவுகள் வரும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் பொழுது நாட்டின் அரசங்கத்தை எதிர்த்து போராட கூலிக்கு பனம் பெருபவர்கள் வருவார்களா என்பது ஐய்யமே.

அமேரிக்கவில் இருந்து பணம் பெற்று இருப்பதாக கூறப்படும் உதய குமார் என்பவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பதை விடுத்து. இவ்வாறு நடந்துள்ளது என பத்திரிக்கைகளுக்கு கூறுவதன் நோக்கம் போராடும் மக்களை திசை திருப்ப வேண்டுமென்பதாக இருக்குமோ என்ற ஐய்யம் எழுவதை தவிற்க முடியவில்லை. உதயகுமார் என்பவர் தம்மீது பொய்யான குற்றச் சாட்டு சுமத்தப்படுள்ளது அதை நிறுபிக்க வில்லயெனில் பிரதமர் மீது அவதூறு வழக்கு போடுவேன் என்று கூறியும் அவர் குற்றத்தை நிறுபிக்க எந்த நடவடிக்கயும் எடுத்ததாக தெரியவில்லை. உன்மையில் இந்த போராட்டத்திற்கு அமேரிக்கவில் இருந்து பனம் வந்ததா? அல்லது மக்களை திசை திருப்ப வேண்டுமென்பதற்காகவா?

4 கருத்துகள்:

கூடல் பாலா சொன்னது…

ஒரு கிராம பஞ்சாயத்தின் பிரச்சினையைக்கூட தீர்க்க இயலாத பிரதமரைக் கொண்ட நாடாகிவிட்டதே ....

நன்பேண்டா...! சொன்னது…

வருகைக்கு நன்றி:koodal bala

Jayakumar Chandrasekaran சொன்னது…

law and order is state subject. Jayalalitha has to take action. Unless CM agree no central forces can enter state.Why does Jayalalitha who arrested 300 persons for lighting crackers has so for avoided arresting Udayakumar even after 160 cases on him.

நன்பேண்டா...! சொன்னது…

வருகைக்கு நன்றி:jk22384

கருத்துரையிடுக