ஞாயிறு

கேள்விக் குறியான மக்களாட்சி..!

ஒரு மக்களாட்சி நடை பெரும் நாட்டில் அந்த நாட்டை ஆளும் அரசு எடுக்கும் எந்த கொள்கை முடிவுகளையும் அன்நாட்டு குடிமக்கள் அனைவரும் ஆதரித்து ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. அப்படி கட்டாய படுத்தினால் அது ஜனனாயக நாடாக இருக்க முடியாது. அரசு எடுத்த முடிவு நல்லதாக அந்த மக்களுக்கு தெரிந்தால் ஆதரிக்கலாம். அது அந்த மக்களுக்கு தவறாக தெரிந்தால் அதை எதிர்த்து போராடலாம். அந்த போராட்டத்துக்கான அலவு கோல் என்பது வன்முறையில் இறங்காமல் அமைதியான முறையில் உன்னாவிரதம், பேரணி, கண்டன ஆர்ப்பட்டங்கள் இப்படி எந்த முறையில் வேண்டுமானாலும் போராடலாம். அவர்கள் வன்முரையில் மட்டும் இறங்க கூடாது. இதுதான் மக்களட்சி தத்துவத்தின் ஆனிவேர். வன்முறையில் இறங்காமல் அறவழியில் போராட அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. இதை இந்திய அரசியல் சாசன சட்டமும் உறுதி படுத்துகின்றது.



ஒரு சாரார் கூடங்குளத்தில் அனு உலையை எதிர்த்து போராடுகின்றனர். மற்றொரு சாரார் அனு உலை பாதுகாப்பானது என்று கூறுகின்றனர். அனு உலை பாதுகாப்பானதா இல்லையா என்பது நமக்கு தேவையில்லை. அதை பற்றி விவாதிக்க வேண்டாம். இந்திய அரசின் எந்த ஒரு திட்டத்தையும் மக்களுக்கு பிடிக்க வில்லை என்றால் அதை எதிர்த்து போராட அவர்களுக்கு உரிமையுள்ளது. எதுவரை என்றால் அவர்கள் வன்முரையில் இறங்காது இருக்கும் வரை. அவர்களின் போராட்டம் என்பது அவர்களுக்கு அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமை. அதை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. அவர்கள் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டால் அவர்களை ஒடுக்க அரசுக்கும் காவல் துறைக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் நான் கண்ட வரையில் இந்து முன்னயினர் மற்றும் காங்கிரஸ் காரர்களால் மாவட்ட ஆட்சியர் அழுவலகம் முன்பு அவர்கள் தாக்கப்பட்டது தவிற அவர்களின் போராட்டத்தில் கடந்த ஏழு மாதமாக எந்த வன்முறையும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.

 

அப்படி இருக்கும் பொழுது கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவல் துறை மற்றும் துனை ரானுவமும் அந்த பகுதியில் முகமிட்டு 144 தடை உத்தரவு பிரபித்துள்ளது எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும். அந்த மக்களுக்கு உனவு தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருற்கள் கிடைக்காமல் தடை செய்து இருப்பதை பார்க்கும் பொழுது இது ஜனனாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற ஐயம் எழுகின்றது. மக்கள் அறவழியில் போராடுவது அவர்களின் உரிமை அதை அரசு காவல் துறையை ஏவி அடக்க முற்படுவது ஜனாயகம் என்ற அமைப்பை குழி தோண்டி புதைப்பதை போல் உள்ளது.



ஆளும் அரசின் ஜனனாயகத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கும் இந்த செயலை கண்டித்து எந்த அரசியல் கட்சியும் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்க வில்லை என்பதுதான் உச்ச கட்ட கொடுமை. போராட்ட காரர்கள் அனு உலையை எதிர்த்து போராடுவது தவறாக கூட இருக்கலாம் ஆனால் அந்த போராட்டத்தை இப்படி அரசு ஒடுக்க நினைப்பது மக்களாட்ட்சி தத்துவத்திற்க்கு ஒரு தவறான முன்னுதாரனம் ஆகி விடாதா? இது மக்களாட்சி என்ற பதத்தை பதம் பார்த்து விடாதா? அந்த மக்களின் போராட்டம் தவறு. அனு உலையை துவங்கினால்தான் மின் பற்றா குறையை சரி செய்ய முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனு உலை தேவையானது என்று அரசு கருதும் பட்சத்தில் அதை மக்களுக்கு புறிய வைப்பது அரசின் கடமை. மக்களுக்கு தெளிவாக அனு உலையால் எற்படும் நன்மைகளை அந்த மக்களுக்கு தெரியபடுத்தி அனு உலைபாதுகாப்பானது என்பதை அந்த மக்களும் நிருபித்து அந்த மக்களின் அச்சைத்தை போக்க வேண்டும் அதை விடுத்து காவல் துறையை ஏவி போராட்டைத்தை ஒடுக்குவது மக்களாட்சி என்ற ததுவத்தை குழி தோண்டி புதைபதற்க்கு சமம்.







வியாழன்

ராணுவ (வீரன்) கோழை..!

இலங்கையில் நடந்த படுகொலைகளை கானும் பொழுது நெஞ்சம் பதரவே செய்கின்றது. குழந்தைகளும் பெண்களும் இலங்கை ரானுவத்தின் தோட்டாக்களுக்கு இறையாகி ரத்த வெல்லத்தில் கிடப்பதை பார்க்கும் பொழுது உனக்கு இந்த உலகில் வாழ எந்த அளவு உரிமையுள்ளதோ அதே அளவு அவர்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் செய்த குற்றம் என்ன பெரும்பான்மையான சிங்களவர்கள் வாழும் இலங்கையில் சிறூபான்மை இனத்தில் பிரந்ததை தவிர. சிறுபான்மை இனத்தில் பிறந்ததது அவர்கள் செய்த குற்றமா? அவர்கள் விருபப்பட்டுதான் சிறுபான்மை இனத்தில் பிறந்தார்களா?. எங்கு பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரமோ சக்தியோ அவர்களுக்கு இருகின்றதா?. அவர்கள் செய்த குற்றம் என்ன?



 விடுதலை புலிகள் கையில் ஆயுதம் எடுத்தார்கள். அதன் விலைவு அவர்களுக்கு மரனம். புலிகளின் போராட்டத்தை நியாயபடுத்த முடியாது.புலிகளின் ஆட்சி பகுதி என அறிவிக்க பட்ட இடத்தில் அவர்கள் செய்த கொலைகள் என்னிலடங்காதவை. அவர்கள் கொலைகள் மூலம் விதத்ததை அவர்கள் மரனம் மூலமாக அருவடை செய்து இருகின்றார்கள். ஒரு நாட்டை எதிர்து ஆயுதம் தாங்கி போராடும் குழு அந்த நாட்டை பொருத்த வரை தீவிரவாத குழுதான் அதில் மற்று கருத்து இல்லை. அவர்கள் கையில் ஆயுதம் எடுத்து போராடுவது சரி என்றால் மாவோயிடுக்களின் ஆயுதம் தாங்கி போராடும் போராட்டமும் சரியா அவர்கள் தீவிரவாதி இல்லையா. மாவோயிஸ்டுக்கள் தீவிரவாதி இல்லயா அல்லது காஸ்மீரை தனி நாடாக பிரித்து தரவேண்டுமென்று போராடும் காஸ்மீர் தீவிரவாதிகளை என்ன சொல்வது. காஸ்மீரை அவர்களின் அனுமதி இல்லாமல் இந்தியா ஆக்ரமித்து விட்டது என்பது காஸ்மீர் விடயங்கள் தெரிந்த அனைவருக்கும் தெளிவாக தெரியும். அவர்களும் தனி இனம் தான். தனி மொழியுடையவர்கள் தான். அதற்காக காஸ்மீரில் ஆயுதம் தாங்கி போராடும் ஒரு குழுவை தீவிரவாதி இல்லை என சொல்ல முடியுமா.

காஸ்மீரிலும் அஸ்ஸாமிலும் மே.வங்கத்திலும் அவர்கள் இனத்திற்காக போராடினாலும் அவர்கள் தீவிரவாதிகள் தான். கஸ்மீர் தீவிரவாதிக்கு ஒரு அலவுகோள் வைத்து அவர்களை தீவிரவாதி என்றும் விடுதலை புலிகளுக்கு ஒரு அலவு கோல் வைத்து அவர்களை தியாகி என்றும் என்னால் சொல்ல முடியாது. இருவருமே தீவிரவாதிகள் தான். நான் பேசும் மொழி தமிழ் ஆதலால் தமிழர்கள் என்ற அங்கிகாரத்தை வைத்து புலிகள் செய்தது சரி என்று என்னால் பார்க்க முடியவில்லை. என் பொழி பேசுபவர்கள் என் இனம் என் சமூகம் என்று குறுகிய வட்டத்தில் நின்று பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களையும் மனிதர்களாகவே பார்க்க விழைகின்றேன். சிங்களவர் உட்பட.


இலங்கை ரானுவ வீரனே கையில் ஆயுதம் எடுத்து உன்னை கொல்ல வருபவனை நீ கொல்வதில் எந்த தவறும் இல்லை. நீ கொல்லாமல் விட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள். இருவரும் கையில் ஆயுததுடன் போராடும் பொழுது ஒருவர்தான். வெற்றி பெற முடியும் மற்றவர் மரனம் தான் அடைவார். ஆனால் கையில் ஆயுதம் எடுத்து உன்னை கொல்ல வராதவர்களை, உன்னை கொல்ல வந்தவர்களின் மொழி பேசுவதால் அவர்களும் கொல்ல பட வேண்டியவர்கள் என்று எப்படி முடிவெடுத்தாய். அவர்களும் உன் நாட்டை சேர்ந்தவர்கள் தானே அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுபில் இருக்கும் நீ அவர்களை கொல்ல உங்களுக்கு என்ன நேர்ந்தது. ஒன்றும் அரியாத அப்பாவி மக்களை கொன்ற உன்னை எப்படி ரானுவ வீரன் என்று அழைப்பது. உன்னுடன் சண்டையிட வருபர்களை கொன்றால் நீ ரானுவ வீரனே! ஆனால் உயிரை கையி பிடித்து வாழ வழிதேடி ஓடிக்கொண்டிருக்கும் அப்பவிகளையும் பெண்களையும் என்ன நடகின்றது என்று அரியாத குழந்தைகளயும் கொன்ற நீ ரானுவ வீரனா இல்லை. இல்லவே இல்லை. உன்னை ரானுவ வீரன் என்று அழைக்க என் மனது ஒப்புகொள்ள வில்லை. வேண்டுமென்றால் ரானுவ கோழை என்று அழைகின்றேன்.

இந்த உலகு யாருடைய தனி சொத்தும் இல்லயே அனைவருக்கும் பொதுவானது தானே. அந்த உலகில் நீங்களக எல்லைகள், நாடுகள், இனம், மொழி, மதம், என்று ஒருவரை ஒருவர் கொன்று அவர்களின் பினங்கள் உங்களது சாம்ராஜ்யத்தை நிறுவ நினைகின்றீர்கள். இந்த உலகில் யாரும் நிரந்தரம் அல்ல. இலங்கை தமிழன் இன்று இரந்தால் நீ நாலை இரக்க போகின்றாய் அவ்வலவே இந்த குருகிய கால வாழ்கையில் ஏன் இந்த ரத்த வெறி.