புதன்

ஐயோ (IPL) கிரிக்கெட் கூத்து...!!!!

சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி பெற்ற செய்தி அனைவருக்கும் சந்தோசம்! அனால் அந்த இறுதி போட்டியில் எப்படி சென்னை வெற்றி பெற்றது என்று அனைவர்க்கும் வியப்பாக இருக்கலாம் ஆச்சர்யமாக இருக்கலாம் என்னையும் சேர்த்து.

நன்றாக விளையாடி கொண்டு இருந்த மும்பை அணி ஏன் திடீர் என்று ஹர்பஜன் சிங்கை களம் இறக்க வேண்டும் பின்பு வந்த வீரர்கள் வரிசையாக வந்த வேகத்தில் மைதானத்தை விட்டு அவுட் ஆகி வெளியேற வேண்டிய அவசியம் என்ன உண்டானது.

இதில் எதோ மர்மம் இருபதாக எனக்கு தோன்றுகிறது, இதில் ஒன்றும் மர்மம் இல்லை எல்லாம் முன்குட்டியே தீர்மானிக்க பட்டதை போல தோன்றுகிறது. கிரிக்கெட் ரசிகர்களே யோசிங்க இனிமேலாவது கிரிக்கெட்டுக்க நேரத்தை வீணாக்காமல் உழைக்க தொடங்குக உழைப்பு ஒன்றுதான் உங்களையும் உங்கள் நாட்டையும் முன்னேற்ற பயன்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக