செவ்வாய்

இந்திய அணியின் பதினோரு கோமாளிகள்-II

இதன் முந்தய பாகம் படிக்காதவர்கள் இங்கு படித்துக்கொள்ளவும்
இந்திய அணியின் பதினோரு கோமாளிகள் பாகம்- இரண்டு




V V S  லக்ஷ்மன் இவரின் தொடக்க கால கிரிகெட்  வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது. இந்திய அணியில் தனக்கான இடத்தை கண்டு பிடிபதற்கு இவர் அதிகமாகவே போராடவேண்டி இருந்தது. இந்த போராட்டத்தில் இவர் தனது ஆட்ட முறையை மற்றாததின்  காரணமாக ஒருநாள் அணியில் இவரால் தனக்கான நிரந்தர இடத்தை தக்கவைக்க 
முடியவில்லை. டெஸ்ட் அணியிலும் சோதனை முயற்சி என்ற அடிபடையில்   தொடக்க 
ஆட்டக்காரராகவும் களமிரக்கபட்டார். 

பல போராட்டத்திற்கு பிறகுதான் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்தார். இவரின்ஆட்ட முறை வெகு இயல்பாகவே டெஸ்ட் போட்டிகளுக்கு பொருந்தி வந்தது .இவர் எப்பொழுதும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாகவே  இருந்து வந்துள்ளார். பொதுவாக இவருடன் ஒரு இயல்பு உள்ளது. முதல்  இன்னிங்க்சில் சிறப்பாக விளையாடவில்லை எனில் இரண்டாவது இன்னிங்க்சில்
சிறப்பாக விளையாடுவார். ஐவரும் ஒய்வு பெரும் தருணத்தை நெருங்கி விட்டதாகவே  தெரிகின்றது. இந்த ஆஸ்திரேலிய தொடரில் இவரும் சொல்லிக்கொள்ளும் படி விளையாட வில்லை. 
  
M S தோணி: இந்திய அணியின் சாதனை கேப்டன், இவர் தலைமையில் தான் 20 - 20 உலக கோப்பை 50 ஓவர் உலக கோப்பை டெஸ்ட் அணி ரேங்கிங்கில் நம்பர் 1  என்று எந்த அணி தலைவரும் செய்யாத  சாதனையை இந்திய அணி நிகழ்த்தி காட்டியது. இந்த சாதனை இவரின்   திறமைக்கு  கிடைத்ததுன்னு  சொல்ல முடியாது.  அதிர்ஷ்டம்  இவருக்கு  கைகொடுத்ததுன்னுதான் சொல்லணும்.

என்னை பொறுத்தவரையில்         இவர் ஒரு மந்தமான செயல்படாத கேப்டன்னு தான் சொல்லணும்.  இன்று  இவரின்  தலைமை பதவி  கேள்வி  குறியாகி  உள்ளது.   இவரின் செயல்  பாடுகளை பார்த்து  நான்  முன்பே எதிர்பார்த்து  ஒன்று தான்.

டெஸ்ட்            போட்டி          என்பது ஒருநாள் போட்டியில்                       இருந்து முற்றிலும் வேறுபட்டது.  ஒருநாள் போட்டியில் ரன்களை  கட்டுபடுத்துவது எவ்வளவு  முக்கியமோ  அதுபோல டெஸ்ட் போட்டியில் விக்கெட்  எடுப்பது  மிக  அவசியம். போட்டிகளிபோது  ஒரு சில நான்கு ரன்கள்  போய்விட்டால்  உடனே கல தடுப்பை தளர்த்தி  மட்டை வீச்சாளர்கள்  ஒன்று இரண்டாக  ரன் எடுக்கும் வாய்ப்பை கொடுத்து  விடுவார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்த வரையில் சில நான்கு ரன்கள் போவதை பற்றி கவலை  படாமல் களத்தடுப்பை இறுக்கமாக  அமைத்து மட்டை வீச்சாளர்களுக்கு  அழுத்தம் தரவேண்டும்.  அப்பொழுதுதான் மட்டை வீச்சாளர்  அழுத்தத்தின்  காரணமாக ஒரு சில தவறுகள் செய்ய நேரிடும்.  அதை சரியாக  பயன்படுத்தி அந்த  விக்கெட்டை  எடுக்க முடியும். அதுபோல இவரின் அணுகு முறை பின்கள மட்டை வீச்சாளர்களை  கட்டுபடுத்தமுடியாமல்  பல  ஆட்டங்கள்  வெற்றி  பாதிக்கப்பட்டுள்ளது.   இவரிடம் ஆக்ரோஷம்  இல்லை என்பது போட்டிகளை காணும்பொழுது தெளிவாக தெரியும்.  இவரிடம் டெஸ்ட்  போட்டிக்கான தலைவர் பதவியை கொடுத்தது என்பது  செத்தவன் கையில் கொடுக்கப்பட்ட வெற்றிலை பாக்கை போன்றது.

விராத் கோலி:  இவர் ஒரு வளர்ந்து வரும் அருமையான இளம் வீரர்.  இவர் ஒருநாள் போட்டிகளில் நல்ல சராசரி  வைத்துள்ளார். தோனியின்  அணுகுமுறையால் இவரின் எதிர்காலமும் கேள்வி குறியாகிடும்போல.  பந்து நன்கு எழும்பும் வேக ஆட்டகலங்களில் சச்சின், திராவிட் போன்ற  ஜாம்பவான்கள் என்று சொல்லும் வீரர்களே தினரும்பொழுது இவர் என்ன  செய்வார். இவர் களமிறங்கும் ஒவொரு ஆட்டத்திலும் இந்திய அணி சொற்ட்ப  ரன்கள் எடுத்து  நான்கு அல்லது ஐந்து விக்கெட் இழந்து தினறிக்கொண்டு  இருக்கும்.  பந்து நன்கு எழுந்து வேகமாக திரும்பும் ஆட்டகலங்களில்  பதட்டம்  காரணமாக விரைவாக வெளியேறும் நிலை ஏற்றப்பட்டு  விருகின்றது. இதற்க்கு அனுபமின்மைதான் காரணம். முனகல வீரர்கள்  நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தால் தான் இவர் போன்றவர்கள் பதற்றம்  இல்லாமல் விளையாட முடியும்.

பதிவு ரொம்ப பெரியதாகி விட்டதால் தொடரும்...!             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக