செவ்வாய்

குறுக்கு வழிகள்:

என்னதான் மந்திரிச்சு உட்டாலும் திருந்தாது. பொரட்டிப் போட்டு அடிச்சாலும் சாவாது. தொவச்சு காயப் போட்டாலும் மறுபடி வெரப்பா வந்துடும். அட இந்த சூப்பர் ஸ்டார பத்திதான்யா சொல்லுதேன்.

சாதாரண நடிகனா வந்தாரு..கைய கால வெட்டி ஸ்டைல் பன்னாரு..அடடான்னு எல்லாரும் பாத்தாய்ங்க..பின்னால போனாய்ங்க..நான் நீன்னு போட்டி போட்டு பொட்டி போட்டாய்ங்க.

நாலாவட்டத்துல எல்லாரும் பின்னால போய் இவரு முன்னால நின்னாரு..நின்னுட்டு போ..அட அத்தோட விட்டாங்களா..நடிகன் மட்டுமில்லப்பா நல்ல மனுஷன்னாய்ங்க..சரி சந்தோஷம்..நல்லா இரு..ஆனா இருந்தாத்தானே..நம்மாலுங்களுக்கு தெரியாத சாமிய கொண்டு வந்தார்..அது வரைக்கும் கோயில் கொளம் பாக்காத பசங்கள்ளாம் தாயித்து கட்டிக்கினாங்க.

சரி..வெட்டியா சுத்திகிட்டு திரியிறதுக்கு இது பரவால்லேன்னு பாத்தா..அவர் தான் எங்க குருன்னாய்ங்க..தலைன்னாய்ங்க...முதல்ன்னாய்ங்க...அட..இப்டி சூடுன்னு அந்த ரூட்ல கொஞ்சம் நூல் உட்டுப்பாத்தாரு...அவ்ளோவ்தான்..நம்ம தலைக்கெல்லாம் இன உணர்வு பிச்சுகிச்சு. ஒடனே டெல்லி பக்கம் லுக்கு உட்டு கொரலு உட்டுப்பாத்தார். நம்மாளுங்களுக்குத்தான் டெல்லியப்பத்தி கவலயில்லியே..ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன..எவனுங்கேக்கலே.

கூட்டி கழிச்சு கும்மியடிச்சு ஓரங்கட்டுனாய்ங்க. சரின்னு குரு லைன்ல போய் பார்த்தார்..தன்னை தலைவனா ஏத்துக்காத ஜனங்ககிட்ட கடவுளோட அவதாரம்னு பிலிம் காட்னார். போய்யான்ட்டாய்ங்க.

களைச்சுப்போய் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு எல்லா பந்தாவையும் விட்டுட்டு வெறும் நடிகனா மறுபடி வந்தார். எல்லாரும் பாராட்னாய்ங்க..கொண்டாடுனாய்ங்க.

நல்ல மாடார்ந்தா என்ன செய்யனும்..? அப்டியே பதூசா போவனும்..போனிச்சா..?

பெரியவர் பேர்ல புதுப்படமாம்..பெரிய டைரக்டராம்..பெரிய பேனராம்..அல்லோல கல்லோலப்படுது..படட்டும் படட்டும்..எனக்கென்ன வந்திச்சுங்கறீங்களா..அதத்தாஞ்சொல்ல வர்றேன்.

பெரிய பேனர்காரங்க பேட்டி குடுத்துக்கிறாங்க..எப்டி..இப்டி..

'சில பல நேரங்கள்லே அவரை அறியாமல் அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்'

“அப்போது என் மகன் குகன், செக் புக்கைக் கொண்டு வராததால் எங்கள் பர்சிலிருந்து ரஜினிக்கு 1001 ரூபாயும், ஷங்கருக்கு 1001 ரூபாயும் அட்வான்ஸாகக் கொடுத்தேன். நாங்கள் ரஜினிக்குக் கொடுத்த புது நோட்டிலிருந்த எண்களின் கூட்டுத் தொகை 9 என்று வந்திருக்கிறது. அதேபோல ஷங்கருக்குக் கொடுத்த நோட்டில் இருந்த எண்களின் கூட்டுத்தொகை 8 என்று வந்திருக்கிறது. ரஜினியின் ராசி எண் 9 என்பதும், ஷங்கரின் ராசி நம்பர் 8 என்பதையும் தெரிவித்த அவர்கள், எனக்கு போன் செய்து ‘தெரிஞ்சே பிளான் போட்டு இந்த நோட்டுகளைக் குடுத்தீங்களா?’னு கேட்டதும், ‘பர்ஸல இருந்து திடீர்னு எடுத்துக் கொடுக்கற பணத்தில் எப்படி நம்பரெல்லாம் பார்க்க முடியும்?’னு கேட்டேன்.”

“எல்லாமே எதிர்பாராம நல்லதா நடந்துக்கிட்டிருக்கு”

என்னதாஞ் சொல்ல வர்றாய்ங்க...எதுவேனா சொல்லிட்டு போ..நான் வேதாளம்ங்றேன். நீ என்ன சொல்ற..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக